Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Member
Messages
53
Reaction score
8
Points
8
அத்தியாயம் 39

இங்கே ஒரு மர்ம நபர் நிலாவை கடத்தி சென்ற செய்தி ராகவன், தேவ், வீர், சூர்யா என அனைவருக்கும் தெரிய வந்தது. நால்வரும் தங்கள் ஆட்கள் மூலம் வெவ்வேறு வழிகளில் நிலாவை தேடி கொண்டு இருந்தனர். சூர்யாவோ வீரை அழைத்து கொண்டு நேராக கார்த்திகேயன் வீட்டிற்கு சென்றான்.

கதவை அடித்து உடைத்து உள்ளே புகுந்தனர் இருவரும்.அதிக சத்தம் கேட்டு வெளியில் வந்தார் கமலி, கார்த்தியின் அம்மா.

அவள் ஆச்சரியமாக, “ஏன் டா இப்படி கதவை உடைந்து கிட்டு வர்றீங்க? என்ன நடந்துச்சு? ” என்று கேட்டாள்.

வீரோ நேராகக் அவரை பார்த்து கேட்டான்:
“நிலா எங்கே? உங்க மகன் தான் அவளை இங்க கடத்தி வச்சு இருக்கானா? .”

கமலி திடுக்கிட்டு:
“என்ன சொல்ற? என் மகன் அப்படி எதுவும் செய்ய மாட்டான். அவன் வீட்டில் கூட இல்ல. நம்புங்க… எனக்கு ஒன்றுமே தெரியாது…” என்றாள்.

ஆனால் சூர்யா அவளைச் சுற்றிப் பார்த்து “உண்மை சொல்லு. இல்லனா…” என்று கத்தினான்.

கமலியோ அதில் பயந்து சொல்லிடுறேன் தம்பி " அது நாங்க உங்க குடும்ப எதிரி ஸ். ஸ். குரூப்ஸ் அதாவது ஆர். ஆர். கான்ஸ்டருக்ஷன்ஸ் தான் எங்க குடும்ப தொழில் அது அழிய காரணம் உங்க அப்பாவும் மாமாவும் அதனால தான் எங்க பெரு ஊரு தொழின்னு எல்லாமே மாத்திக்கிட்டு உங்க காலேஜ் லா வேலைக்கு சேர்ந்தான் என் பையன்.

அப்படியே உங்க குடும்பத்துல நல்ல பெயர் சம்பாதித்து உங்க வீட்டு பொண்ணு நிலாவா கல்யாணம் பண்ணி உங்க எல்லாரையும் பழி வாங்கலாம்னு என் பையன் திட்டம் போட்டான். அப்ப தான் கதிர் நிலாவா காதலிக்குறது தெரிஞ்சு அவன கொலை முயற்சி செஞ்சான் அதுக்கு அடுத்து அவன் கல்யாணம் பண்ண உங்க வீட்ல சம்மதம் வாங்கி இருந்த நேரம் தான் சூர்யா தம்பி நிலாவா கடத்தி அவள கல்யாணம் பண்ணிக்கிட்டாரு என் பையனுக்கு எல்லாமே புதுசா இருக்கனும் ஆனா உங்க நிலா அப்படி இல்லையே ஏற்கனவே அவ மனசுல ஒருத்தன் இருந்தான் அதனால தான் அவள கொலை பண்ண ரெண்டு முறை முயற்சி செஞ்சான் கடைசியில சூர்யா வந்து காப்பாத்திட்டான்.


நானும் கடைசி முறையா என் பையன் கிட்ட இந்த பழிவாங்குற வேலை எல்லாம் விடுடாலாம்னு சொன்னேன் ஆனா அவன் எனக்கு பதிலா இப்ப அந்த வேலையை சூர்யாவே செய்றான், நானும் அது என்னனு கேட்டேன் அதுக்கு அவன் நான் நினைச்ச மாதிரி நிலாவா கல்யாணம் பண்ணி அவள கொடுமை பண்ணிகிட்டு இருக்கானு சொன்னான். அப்பறம் இன்னக்கி காலையில ரொம்பவே சந்தோஷமா அப்பா வாழந்த வீட்டை பாக்க போறேன்னு சொல்லி போயிருக்கான் " என நடந்த அனைத்தையும் கூறி முடிக்க

இதை கேட்ட வீரோ " பொம்பளைய நீ கிருஷ் " என கத்த வெளியே இருந்து வந்தான் ஏ. சி. பி. கிருஷ்ணபிரகாஷ். அவனோ சொல்லு வீர் என்றான்

வீரோ " கிருஷ் இந்த பொம்பளைய அர்ரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு போ அண்ட் அப்பா கிட்ட ரெகார்ட் பண்ண ஆடியோ வா கொடுத்துட்டு " என்றான்

கிருஷ்யும் " சரி வீர் நான் பாத்துக்குறேன் " என கூறி கமலியை அர்ரெஸ்ட் செய்தான்.

வீரோ இப்போது சூர்யாவை பார்த்து " வா போகலாம் அங்க பாப்பா எப்படி இருக்கானு தெரியல அவ நல்ல படியா கிடைக்கட்டும் அப்பறம் இருக்கு உனக்கு " என கூறி அவனோடு கமலி கூறிய அந்த பழைய வீட்டிற்கு சென்றான்.

---

நகருக்கு ஒதுக்கு புறமா பேய் கூட பகலில் வர அஞ்சும் வகையில் தூசியும் ஒட்டடையும் படிந்து பாலாடைந்து கிடந்த அந்த வீட்டில் மயக்க நிலையில் ஒரு தூணில் கட்ட பட்டு இருந்தாள் தூரிகை நிலா. அவள் எதிரே கார்த்திகேயேன் கண்ணில் கொடூரமா அவளை பார்த்த படி அமர்ந்து இருந்தான். அருகே மேலும் சில ரவுடிகளும் நின்று இருந்தனர்.


அப்போது கதவை உடைத்து கொண்டு வேகமாக உள்ளே வந்த வீரும் சூர்யாவும் கார்த்திகேயனை நோக்கி " இங்க பாரு பிரச்னை உனக்கும் எங்களுக்கும் தான் அவள விட்டுவிடு இல்லைனா உன் உயிர்க்கு நாங்க தான் எமன் " என இருவரும் கர்ஜிக்க

அவனோ ' வாங்க டா என் எதிரி வீட்டு வாரிசுகள உங்களுக்குகாக தானடா என் அப்பாவ நான் இழந்தேன் அப்படி இருக்கும் போது அவள எப்படி விடுவேன் ' ' டேய் என்ன வேடிக்கை பாக்குறீங்க ரெண்டு பெரையும் அடிச்சி போடுங்க மொத்தமா மூணு பெரையும் வீட்டோட கொளுத்தி போட்டு போகலாம் ' என்றான் அவன்

அதற்குள் அந்த ரவுடிகள் இருவரையும் தாக்க....

வீர் ஒரு நாற்காலியை தூக்கி ஒருவனின் மீது அடித்தான்.

சூர்யா ஒருவனை சுவரில் அடித்து தள்ளி, “ என் நிலா வா தொட்டா நீ உயிரோடவே வெளிய போக மாட்ட !” என்று கர்ஜித்தான்

நிலா தன்னை விடுவிக்க முயன்று, “மாமா , வீர் !” என்று கத்தினாள்.

வீரோ வேகமாக சென்று அவள் கட்டுக்களை அவிழ்த்து விட அப்போது கார்த்தி துப்பாக்கியை எடுத்து சூர்யாவை சூட கூறி வைத்தான். அவன் துப்பாக்கியை அழுத்த
டம்! 💥💣 என்று ஒரு பெரிய சத்தம்...

அந்த சத்தம் கேட்டதும், எல்லாரும் அப்படியே நின்றார்கள்.

சூர்யாவோ எலிய்ய்....... என்று அலற

வீரோ " நிலா... ஏன்டா இப்படி பண்ண " என்று கூவளோடு அவளை மடியில் தாங்கி கொண்டான். அதற்குள் சூர்யாவோ அவன் துப்பாக்கியால் கார்த்திகேயனின் நெஞ்சில் சூட அவனும் அங்கேயே உயிரை துறந்தான்.

பின் கை தோள் பட்டையில் குண்டு அடிப்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலாவை தூக்கி கொண்டு இரண்டு பெரும் மருத்துவமனைக்கு சென்றனர். காரில் சூர்யாவோ " சாரி எலி, உன் மாமு வா மன்னிச்சுடு டா இனிமே உன் வாழ்க்கையில நான் வரவே மாட்டேன் " என கூறி அவள் நெற்றியில் முத்தமிட்டான்.

முன்னாள் இருந்த வீரோ " கொஞ்சம் வாய்ய மூடி கிட்டு வரியா " என்றான் கோபமாக

---

அடுத்த சில மணிநேரங்களில், நிலா ரத்தக் காயத்தோடு ஐ. சி. யூ விற்கு கொண்டு செல்லப்பட்டாள்.
அறை வெளியே அனைவரும் கூட்டமாக நின்று இருந்தனர். தேவ்,பல்லவி, கதிர், ரதி, ஆத்யா, வீர்… எல்லாரும் பதற்றத்தில் காத்திருந்தனர்.

சூர்யாவோ வெறித்த பார்வையோடு அந்த ஐ. சி. யூ வையே பார்த்து கொண்டு நின்றான். அப்போது அங்கே வந்த ராகவனோ சூர்யாவின் கன்னத்தில் ஓங்கி அரைந்து " என்ன காரியம் டா பண்ணி இருக்கா சின்ன குழந்தை டா அவ அவளை போய் எப்படி டா உனக்கு கஷ்டப்படுத்த மனசு வந்துச்சு " என கோபமாக கேக்க

ரதியோ ' ராகவ் விடு அவன என்ன பண்ணி இருந்தாலும் என் சூர்யா மேல யாரும் கை வைக்க கூடாது ' என்றாள்

அதை கேட்ட பல்லவியோ " என்ன மன்னிச்சிருங்க தேவ் அண்ணா இந்த பாவியாள தான் நிலா இன்னக்கி இப்படி ஒரு நிலைமையில இருக்க, ஏன் தான் இவன பெத்தேன்னு இருக்கு " என அழுக

தேவ் அவள் கையை பிடித்து கொண்டு " விடு கவி அவன் சின்ன பையன் நாமளே அவன வெறுத்தா அவன் எங்க போவான் சொல்லு " என கேக்க

ராகவனோ ' இனிமே இங்க நின்ன நானே உன்ன கொன்னுடுவேன் போட வெளிய' என சூர்யாவின் கழுத்தை பிடித்து வெளியே தள்ளினான்.

தேவ்வோ வேகமாக அவன் அருகில் சென்று " விடு மச்சான் அவன " என்றான்

சூர்யாவோ ' எல்லாருக்கும் சாரி இனிமே நான் உங்க யார் கண்ணுலயும் பட மாட்டேன் ' என கூறி வெளியே சென்று விட்டான். வெளியே வானில் இடி மின்னல் பிளந்து கொண்டு இருக்க.... அதை விட அவன் மனமோ ஆயிரம் மடங்கு உடைந்து தூள் துளாக சிதறியது. கொட்டும் மழையையும் பார்க்காமல் சாலையில் ரத்தம் படிந்த சட்டையோடு சாலையில் நடந்தே அவன் பீச் ஹவுஸ் சென்றான்.

இனி சூர்யனும் - நிலவும் இணையுமா...?

அடுத்த பாகத்தில்....

தொடரும்....
 

Author: Nithya
Article Title: ரதி 🩵 39
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top