- Messages
- 279
- Reaction score
- 215
- Points
- 63
அத்தியாயம் - 15
அழகான நாட்கள், ஒவ்வொரு மனிதனின் கண்ணோட்டப் படி வெவ்வேறு மனநிலையில் மெல்ல மெல்ல நகர்ந்தது.
"கவி ரெடியா, உன் பேக்ல தேவையான எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டேன்.. வேற ஏதாவது எடுத்து வைக்கணுமா டி" தானும் அலுவலகம் செல்ல தயாராகியபடி ஸ்வாதி கேட்க,
"நீ எடுத்து வச்சா எல்லாம் சரியா தான் இருக்கும் ஸ்வாதி, நானும் ரெடி தான்.. ஆனா இந்த தலைய மட்டும் கொஞ்சம் பின்னி விடேன், கைய தூக்கி பின்ன ஒரே சோம்பேறித்தனமா இருக்கு" என்றவள் ஹாஆ.. என அகலமாக வாயை திறந்து பெரிய கொட்டாவி விட, இடுப்பில் கை வைத்து அவளை முறைத்த ஸ்வாதி,
"என்ன கவி இன்னும் சின்ன பிள்ளை மாறியே இருக்க, உன் வேலைய நீயே செஞ்சிக்க மாட்டேங்குற, நாளைக்கு உன்ன ஒரு நல்ல இடத்துல கல்யாணம் பண்ணி கொடுக்கறக்குள்ள நான் ஒரு வழி ஆகிடுவேன் போல.." சலிப்பாக சொன்னவளை இடையோடு கட்டி செல்லம் கொஞ்சிய கவி,
"அப்டிலாம் என்னைய தனியா கழட்டி விட்டு உன்னால நிம்மதியா இருக்க முடியாது ஸ்வாதி, நான் எங்க போனாலும் உன்னையும் கையோட அழைச்சிட்டு தான் போவேன்" என்றாள் மூக்கை சுருக்கி செல்லமாக.
"ஹம்.. அதுக்கு நீயும் நானும் அண்ணன் தம்பிய தான் கட்டிக்கிட்டு ஒரே வீட்டுக்கு போகணும்" ஹ்ம்.. என்று பெருமூச்சு விட்ட ஸ்வாதி,
"இதெல்லாம் கனவுல தான் நடக்கும் கவி, முதல்ல வேலைக்கு போய் கொஞ்சம் பணம் சேத்து வச்சி, உனக்கு ஒரு நல்ல வாழ்க்கைய அமைச்சு கொடுத்துட்டு தான் என்ன பத்தி நான் யோசிப்பேன்.. எனக்கு உன் வாழ்க்கை தான் முதல்ல முக்கியம் கவி" என்ற தோழியை கண் கலங்கி போய் பார்த்தாள் கவி.
"ஏன் ஸ்வாதி எம்மேல இவ்ளோ பாசம் வச்சிருக்க, எனக்காக நீ என்னெல்லாம் பண்ணிட்ருக்க.. என்ன பெத்தவங்க இருந்திருந்தா கூட, காதும் கண்ணும் சரியா பாக்க கேக்க தெரியாத எனக்கு, உன் அளவுக்கு அன்பா கவனிச்சி, என் தேவைகளை முகம் சுளிக்காம செஞ்சி கொடுத்து பாத்துருப்பாங்களானு தெரியல..
இப்ப வரை என்ன குழந்தை ஒரு மாதிரியே பாத்துக்குற.. என் வயசு தான் உனக்கும், நீ நெனச்சிருந்தா உன் வாழ்க்கைய எப்டியோ அமைச்சிகிட்டு காதல் கல்யாணம்னு சந்தோஷமா வாழ தொடங்கி இருக்கலாம்..
ஆனா ஒரு அம்மா தன் பிள்ளையோட நெனப்புல எப்பவும் இருக்க மாறி, என் நினைப்பாவே இருக்க டி நீ.. எனக்கு ஒரு நல்ல வாழ்க்கைய அமைச்சு கொடுக்கணும்னு நீ படுற கஷ்டம் இருக்கே, உன் இடத்துல யார் இருந்தாலும் இப்டிலாம் பண்ண மாட்டாங்க ஸ்வாதி..
இதுக்கெல்லாம் நான் தகுதியானவளான்னு தெரியல, ஆனா எப்பவும் நீ மட்டும் தான் எனக்கு முதல் சொந்தம், நீ இல்லாம நான் இல்ல ஸ்வாதி" உணர்ச்சி வசப்பட்டு கண்ணீரோடு சொல்லும் கவியை, செல்ல முறைப்போடு பார்த்த ஸ்வாதி,
"கவி.. அழாதே.." என அவள் கண்களை துடைத்து விட்டவளாக,
"என்ன வேணாம்னு தூக்கி போட்டு போன பெத்தவங்களுக்கு மத்தியில, எனக்குன்னு தோழி ஸ்தானத்தையும் தாண்டி, கள்ளம்கபடம் இல்லாத முதல் உறவா கிடைச்ச சொந்தம் நீதான் கவி..
உன் சிரிப்புல தான் என் சந்தோஷம் இருக்கு.. சரி சரி இப்டியே பேசி நேரத்தை ஓட்ட ட்ரை பண்ணாதே, ஒழுங்கா நேரத்தோட இன்டெர்வியூ அட்டன் பண்ண போ.. இந்த முறை கண்டிப்பா உனக்கு வேலை கிடைக்கும் கிடைக்கனும்" என்று மனதார சொன்னவள், கவியின் தலையை பின்னி விடவும் தவறவில்லை.
*******
"மாம் இன்னைக்கு என்ன ஸ்பெஷல்" என்றபடி உணவு மேஜையில் அமர்ந்தான் ஆத்வி.
"உனக்கு பிடிச்ச தேங்காய்பால் சாதம் தான் ஆத்வி" என்ற மித்ரா அவனுக்கு ஒரு தட்டை எடுத்து வைத்து பரிமாற, உணவருந்தி கொண்டிருந்த ஆதி தலை உயர்த்தி மகனையும் மனைவியையும் ஒரு பார்த்து விட்டு, மீண்டும் உணவில் கவனத்தை செலுத்தினான்.
அதை கவனித்த ஆத்வி நமட்டு சிரிப்போடு தாயின் கை பிடித்து அருகில் அமர்த்திக் கொண்டவன், "மாம் நீங்க செய்யற சாப்பாடு அல்டிமேட் டேஸ்ட்னா, அதையே உங்க கையாள ஊட்டி விட்டா டாப் நாச், இன்னும் டேஸ்ட் பிச்சிக்கும் சோ நீங்களே ஊட்டி விட்ருங்க"
ஆதியை பார்த்துக் கொண்டே அவன் சொல்ல, சட்டென தலை தூக்கி ஆத்வியை முறைத்தவனாக, "மித்து நான் ஆபிஸ் போகணும் எனக்கு சாப்பாடு எடுத்து வை" என்றான் அதிகாரமாக.
எப்போதும் போல் கணவன் மகன் இருவருக்கும் இடையில் மாட்டிக் கொண்டு முழித்த மித்ராவின் காரத்தை ஆத்வி இறுக்கமாக பிடித்து வைத்துக்கொண்டு,
"மாம்.. நானும் தான் ஆபிஸ் போகணும் எனக்கு ஃபர்ஸ்ட் ஊட்டுங்க, இல்லனா நான் வெளிய சாப்ட்டுக்குறேன்" என்றதும்,
"அச்சோ.. இதோ இப்பவே ஊட்டி விடுறேன் கண்ணா" என்ற மித்ரா கணவனை மறந்து மகனுக்கு உணவூட்ட, அவளை வெறியாக முறைத்துக் கொண்டிருக்கும் ஆதியை கண்டு வெற்றிப் புன்னகை வீசிய ஆத்வி,
"மாம்.. உங்க கைல ஏதோ மேஜிக் இருக்கு, நீங்க ஊட்டிட்டே இருந்தா நான் வயிறு நிறைய சாப்டுட்டே இருப்பேன்" தந்தையை வெறுப்பேற்ற சொன்னாலும் அதுவே உண்மையும் கூட.
மகனை நிறைந்த புன்னகையோடு கண்டாலும், தன்னை பாவமாக பார்க்கும் மனைவியை கண்டு உதட்டுக்குள் நகைப்பதை மீசை முடியால் மறைத்த ஆதி,
"ராஸ்கல் முதல்ல இவனுக்கு கல்யாணத்தை பண்ணி வைக்கணும், அப்பதான் என் மித்து பேபிய அதிக நேரம் என்னோட வச்சிக்க முடியும்" வில்லங்கமாக எண்ணி ஆத்வியை நக்கல் பார்வை பார்த்தபடியே தட்டில் கை கழுவ,
"தாத்தா" என அழைத்துக் கொண்டே ஆத்வியின் அறையில் இருந்து கண்ணை கசக்கியபடி உறக்கக் கலக்கத்தில் தள்ளாடி வந்த தன்யா குட்டி, ஆதியின் மடியில் ஏறிக்கொண்டது.
"தன்யா குட்டி இப்ப தான் தூங்கி எழுந்தாளா" என்ற ஆதி கலைந்து கிடக்கும் மெல்லிய குட்டி முடிகளை ஒதுக்கி விட்டான்.
"ஆமா தாத்தா, அம்மாவை காணல . அம்மா வேணும் தாத்தா" தன்யா அழத் தொடங்க, இது இப்போதெல்லாம் வழக்கமாகிப் போனது.
இரவில் ஆருவை இறுக்கமாக அணைத்துக்கொண்டு தூங்கும் தன்யாவை அல்லேக்காக தூக்கி வந்து ஆத்வி அறையில் படுக்க வைத்துவிட்டு, தன் காதல் மனைவியோடு இரவெல்லாம் காதல் பாடம் படிக்க சென்று விடுவான் திருட்டு பூனை அஜய்.
காலையில் அம்மாவை தேடி அழும் குழந்தையை சமாதானம் செய்வதே மூவருக்கும் பெரிய வேலையாகி விடும்.
"மாம்.. மாமாவும் அக்காவும் தினமும் ரூம்ல அப்டி என்னதான் பண்ணிட்டு இருக்காங்க, குழந்தைய தனியா விட்டுட்டு" என்றபடி கை கடிகாரத்தை திருப்பிப் பார்த்தவனாக,
"இன்னைக்கும் டைம் எய்ட் தாண்டியாச்சி" தினம் குழந்தை அழுவதை தாங்காமல் ஆத்வி கத்த, அவனுக்கு பதில் சொல்ல தெரியாத கேடிப் பெற்றோராய் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து, ஆதி தலையில் அடித்துக் கொண்டான்.
"இந்த ராஸ்கல் எப்டி எனக்கு வந்து பொறந்தான், அப்டியே அவன் அம்மா மாறி" முணுமுணுத்த ஆதி மனைவியை முறைக்க தவறவில்லை.
வாயில் கை வைத்து கணவனை பாராது நமட்டு சிரிப்போடு தலை கவிழ்ந்து கொண்ட மித்ரா, "நல்ல வேலை வர போற என் மருமக தப்பிச்சா.. இருந்தாலும் பிள்ளைய இப்டி பச்ச மண்ணா வளத்து இருக்க கூடாதோ" என்ற தீவிரமான யோசனையில் அவள் இருக்க,
"மாம்.. உங்க கிட்ட தான் பேசிட்டு இருக்கேன், ஆரு உள்ள அப்படி என்ன தான் பண்ணிட்டு இருக்கா, இருங்க நானே போய் அவளை கூட்டிட்டு வரேன்" குழந்தையின் அழுகை அதிகமானதால் ஆவேசமாக அவன் எழப் போக,
"ஐயோ ஆத்வி, கொஞ்ச நேரம் உக்காரு டா.. இப்ப என்ன அவசரம் உனக்கு, ஆரு.. ஆரு.. அவ.. அவளுக்கு.. ஹான் அவளுக்கு தலை வலினு நைட்தான் என்கிட்ட சொல்லிட்டு போய் படுத்தா.. அதனால நீ போய் அவளை டிஸ்டர்ப் பண்ணாதே, நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும்" வாய்க்கு வந்ததை உளறி வைத்தாள் மித்ரா.
தடுமாறி பொய் கூறும் மனைவியை குறும்பாக பார்த்து அந்த நிலையிலும் ஆதி கண்ணடிக்க, நெஞ்சம் படபடக்க முகம் சிவந்த மித்ரா, "அமைதியா இருங்க" என மகனை கண் காட்டவும்,
"தனியா மாட்டும் போது இருக்கு டி உனக்கு" மனதில் நினைத்தவன் அடுத்து மகன் கேட்ட கேள்வியில், சிரிப்பை அடக்க முடியாமல் திண்டாடி விட்டான் ஆதி.
"ஏன் மாம்.. தினமுமா அவளுக்கு தலை வலி வருது, அவ அதிகம் கோல்ட் ஐட்டம்ஸ் கூட எடுத்துக்க மாட்டாளே.. ஒருவேளை இந்த மாமா ஏதாவது அக்காவை பண்ணி இருப்பாரோ" யோசனையாக கேட்டவன் தோளில் மெல்லமாக அடித்த மித்ரா,
"டேய். .உனக்கு தான் ஆபிஸ்க்கு நேரம் ஆகுதுன்னு சொன்னேல்ல சீக்கிரம் கிளம்பு, நான் தன்யாவ பாத்துக்குறேன்"
அவனை கடினப்பட்டு அலுவலகம் அனுப்பி வைத்தவளாக, தன்னையே கண்ணெடுக்காமல் பார்க்கும் கணவனின் பார்வையில் இருந்து தப்பிக்க, பேத்தியை தூக்கிக் கொண்டு கிட்சன் ஓடி விட்டாள் மித்ரா. போகும் மனைவியைக் கண்டு கள்ளமாக சிரித்துக் கொண்டான் ஆதி.
ஆத்வி அலுவலகம் சென்ற சில மணி நேரத்தில் எல்லாம், 'ஆதி கிருஷ்ணன்' என்ற பெயர் பலகையை தாங்கி இருக்கும் அந்த பெரிய வீட்டு முன்னால் நின்று, அண்ணாந்து பார்த்த கவிக்கு உள்ளுக்குள் ஏதோ இனம் புரியாத தவிப்பு ஏற்பட்டது.
வாச்மென் கேட்டை திறக்கவும், தன்னுடைய சொந்த அத்தை மாமா வீடு தான் இது என்று அறியாமலே வலது காலை எடுத்து வைத்து வந்த கவி, காலிங் பெல்லை தட்டி விட்டு, கையை பிசைந்துக் கொண்டு பதட்டமாக நின்றிருக்க, கதவை திறந்தாள் ஆரு.
அழகான நாட்கள், ஒவ்வொரு மனிதனின் கண்ணோட்டப் படி வெவ்வேறு மனநிலையில் மெல்ல மெல்ல நகர்ந்தது.
"கவி ரெடியா, உன் பேக்ல தேவையான எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டேன்.. வேற ஏதாவது எடுத்து வைக்கணுமா டி" தானும் அலுவலகம் செல்ல தயாராகியபடி ஸ்வாதி கேட்க,
"நீ எடுத்து வச்சா எல்லாம் சரியா தான் இருக்கும் ஸ்வாதி, நானும் ரெடி தான்.. ஆனா இந்த தலைய மட்டும் கொஞ்சம் பின்னி விடேன், கைய தூக்கி பின்ன ஒரே சோம்பேறித்தனமா இருக்கு" என்றவள் ஹாஆ.. என அகலமாக வாயை திறந்து பெரிய கொட்டாவி விட, இடுப்பில் கை வைத்து அவளை முறைத்த ஸ்வாதி,
"என்ன கவி இன்னும் சின்ன பிள்ளை மாறியே இருக்க, உன் வேலைய நீயே செஞ்சிக்க மாட்டேங்குற, நாளைக்கு உன்ன ஒரு நல்ல இடத்துல கல்யாணம் பண்ணி கொடுக்கறக்குள்ள நான் ஒரு வழி ஆகிடுவேன் போல.." சலிப்பாக சொன்னவளை இடையோடு கட்டி செல்லம் கொஞ்சிய கவி,
"அப்டிலாம் என்னைய தனியா கழட்டி விட்டு உன்னால நிம்மதியா இருக்க முடியாது ஸ்வாதி, நான் எங்க போனாலும் உன்னையும் கையோட அழைச்சிட்டு தான் போவேன்" என்றாள் மூக்கை சுருக்கி செல்லமாக.
"ஹம்.. அதுக்கு நீயும் நானும் அண்ணன் தம்பிய தான் கட்டிக்கிட்டு ஒரே வீட்டுக்கு போகணும்" ஹ்ம்.. என்று பெருமூச்சு விட்ட ஸ்வாதி,
"இதெல்லாம் கனவுல தான் நடக்கும் கவி, முதல்ல வேலைக்கு போய் கொஞ்சம் பணம் சேத்து வச்சி, உனக்கு ஒரு நல்ல வாழ்க்கைய அமைச்சு கொடுத்துட்டு தான் என்ன பத்தி நான் யோசிப்பேன்.. எனக்கு உன் வாழ்க்கை தான் முதல்ல முக்கியம் கவி" என்ற தோழியை கண் கலங்கி போய் பார்த்தாள் கவி.
"ஏன் ஸ்வாதி எம்மேல இவ்ளோ பாசம் வச்சிருக்க, எனக்காக நீ என்னெல்லாம் பண்ணிட்ருக்க.. என்ன பெத்தவங்க இருந்திருந்தா கூட, காதும் கண்ணும் சரியா பாக்க கேக்க தெரியாத எனக்கு, உன் அளவுக்கு அன்பா கவனிச்சி, என் தேவைகளை முகம் சுளிக்காம செஞ்சி கொடுத்து பாத்துருப்பாங்களானு தெரியல..
இப்ப வரை என்ன குழந்தை ஒரு மாதிரியே பாத்துக்குற.. என் வயசு தான் உனக்கும், நீ நெனச்சிருந்தா உன் வாழ்க்கைய எப்டியோ அமைச்சிகிட்டு காதல் கல்யாணம்னு சந்தோஷமா வாழ தொடங்கி இருக்கலாம்..
ஆனா ஒரு அம்மா தன் பிள்ளையோட நெனப்புல எப்பவும் இருக்க மாறி, என் நினைப்பாவே இருக்க டி நீ.. எனக்கு ஒரு நல்ல வாழ்க்கைய அமைச்சு கொடுக்கணும்னு நீ படுற கஷ்டம் இருக்கே, உன் இடத்துல யார் இருந்தாலும் இப்டிலாம் பண்ண மாட்டாங்க ஸ்வாதி..
இதுக்கெல்லாம் நான் தகுதியானவளான்னு தெரியல, ஆனா எப்பவும் நீ மட்டும் தான் எனக்கு முதல் சொந்தம், நீ இல்லாம நான் இல்ல ஸ்வாதி" உணர்ச்சி வசப்பட்டு கண்ணீரோடு சொல்லும் கவியை, செல்ல முறைப்போடு பார்த்த ஸ்வாதி,
"கவி.. அழாதே.." என அவள் கண்களை துடைத்து விட்டவளாக,
"என்ன வேணாம்னு தூக்கி போட்டு போன பெத்தவங்களுக்கு மத்தியில, எனக்குன்னு தோழி ஸ்தானத்தையும் தாண்டி, கள்ளம்கபடம் இல்லாத முதல் உறவா கிடைச்ச சொந்தம் நீதான் கவி..
உன் சிரிப்புல தான் என் சந்தோஷம் இருக்கு.. சரி சரி இப்டியே பேசி நேரத்தை ஓட்ட ட்ரை பண்ணாதே, ஒழுங்கா நேரத்தோட இன்டெர்வியூ அட்டன் பண்ண போ.. இந்த முறை கண்டிப்பா உனக்கு வேலை கிடைக்கும் கிடைக்கனும்" என்று மனதார சொன்னவள், கவியின் தலையை பின்னி விடவும் தவறவில்லை.
*******
"மாம் இன்னைக்கு என்ன ஸ்பெஷல்" என்றபடி உணவு மேஜையில் அமர்ந்தான் ஆத்வி.
"உனக்கு பிடிச்ச தேங்காய்பால் சாதம் தான் ஆத்வி" என்ற மித்ரா அவனுக்கு ஒரு தட்டை எடுத்து வைத்து பரிமாற, உணவருந்தி கொண்டிருந்த ஆதி தலை உயர்த்தி மகனையும் மனைவியையும் ஒரு பார்த்து விட்டு, மீண்டும் உணவில் கவனத்தை செலுத்தினான்.
அதை கவனித்த ஆத்வி நமட்டு சிரிப்போடு தாயின் கை பிடித்து அருகில் அமர்த்திக் கொண்டவன், "மாம் நீங்க செய்யற சாப்பாடு அல்டிமேட் டேஸ்ட்னா, அதையே உங்க கையாள ஊட்டி விட்டா டாப் நாச், இன்னும் டேஸ்ட் பிச்சிக்கும் சோ நீங்களே ஊட்டி விட்ருங்க"
ஆதியை பார்த்துக் கொண்டே அவன் சொல்ல, சட்டென தலை தூக்கி ஆத்வியை முறைத்தவனாக, "மித்து நான் ஆபிஸ் போகணும் எனக்கு சாப்பாடு எடுத்து வை" என்றான் அதிகாரமாக.
எப்போதும் போல் கணவன் மகன் இருவருக்கும் இடையில் மாட்டிக் கொண்டு முழித்த மித்ராவின் காரத்தை ஆத்வி இறுக்கமாக பிடித்து வைத்துக்கொண்டு,
"மாம்.. நானும் தான் ஆபிஸ் போகணும் எனக்கு ஃபர்ஸ்ட் ஊட்டுங்க, இல்லனா நான் வெளிய சாப்ட்டுக்குறேன்" என்றதும்,
"அச்சோ.. இதோ இப்பவே ஊட்டி விடுறேன் கண்ணா" என்ற மித்ரா கணவனை மறந்து மகனுக்கு உணவூட்ட, அவளை வெறியாக முறைத்துக் கொண்டிருக்கும் ஆதியை கண்டு வெற்றிப் புன்னகை வீசிய ஆத்வி,
"மாம்.. உங்க கைல ஏதோ மேஜிக் இருக்கு, நீங்க ஊட்டிட்டே இருந்தா நான் வயிறு நிறைய சாப்டுட்டே இருப்பேன்" தந்தையை வெறுப்பேற்ற சொன்னாலும் அதுவே உண்மையும் கூட.
மகனை நிறைந்த புன்னகையோடு கண்டாலும், தன்னை பாவமாக பார்க்கும் மனைவியை கண்டு உதட்டுக்குள் நகைப்பதை மீசை முடியால் மறைத்த ஆதி,
"ராஸ்கல் முதல்ல இவனுக்கு கல்யாணத்தை பண்ணி வைக்கணும், அப்பதான் என் மித்து பேபிய அதிக நேரம் என்னோட வச்சிக்க முடியும்" வில்லங்கமாக எண்ணி ஆத்வியை நக்கல் பார்வை பார்த்தபடியே தட்டில் கை கழுவ,
"தாத்தா" என அழைத்துக் கொண்டே ஆத்வியின் அறையில் இருந்து கண்ணை கசக்கியபடி உறக்கக் கலக்கத்தில் தள்ளாடி வந்த தன்யா குட்டி, ஆதியின் மடியில் ஏறிக்கொண்டது.
"தன்யா குட்டி இப்ப தான் தூங்கி எழுந்தாளா" என்ற ஆதி கலைந்து கிடக்கும் மெல்லிய குட்டி முடிகளை ஒதுக்கி விட்டான்.
"ஆமா தாத்தா, அம்மாவை காணல . அம்மா வேணும் தாத்தா" தன்யா அழத் தொடங்க, இது இப்போதெல்லாம் வழக்கமாகிப் போனது.
இரவில் ஆருவை இறுக்கமாக அணைத்துக்கொண்டு தூங்கும் தன்யாவை அல்லேக்காக தூக்கி வந்து ஆத்வி அறையில் படுக்க வைத்துவிட்டு, தன் காதல் மனைவியோடு இரவெல்லாம் காதல் பாடம் படிக்க சென்று விடுவான் திருட்டு பூனை அஜய்.
காலையில் அம்மாவை தேடி அழும் குழந்தையை சமாதானம் செய்வதே மூவருக்கும் பெரிய வேலையாகி விடும்.
"மாம்.. மாமாவும் அக்காவும் தினமும் ரூம்ல அப்டி என்னதான் பண்ணிட்டு இருக்காங்க, குழந்தைய தனியா விட்டுட்டு" என்றபடி கை கடிகாரத்தை திருப்பிப் பார்த்தவனாக,
"இன்னைக்கும் டைம் எய்ட் தாண்டியாச்சி" தினம் குழந்தை அழுவதை தாங்காமல் ஆத்வி கத்த, அவனுக்கு பதில் சொல்ல தெரியாத கேடிப் பெற்றோராய் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து, ஆதி தலையில் அடித்துக் கொண்டான்.
"இந்த ராஸ்கல் எப்டி எனக்கு வந்து பொறந்தான், அப்டியே அவன் அம்மா மாறி" முணுமுணுத்த ஆதி மனைவியை முறைக்க தவறவில்லை.
வாயில் கை வைத்து கணவனை பாராது நமட்டு சிரிப்போடு தலை கவிழ்ந்து கொண்ட மித்ரா, "நல்ல வேலை வர போற என் மருமக தப்பிச்சா.. இருந்தாலும் பிள்ளைய இப்டி பச்ச மண்ணா வளத்து இருக்க கூடாதோ" என்ற தீவிரமான யோசனையில் அவள் இருக்க,
"மாம்.. உங்க கிட்ட தான் பேசிட்டு இருக்கேன், ஆரு உள்ள அப்படி என்ன தான் பண்ணிட்டு இருக்கா, இருங்க நானே போய் அவளை கூட்டிட்டு வரேன்" குழந்தையின் அழுகை அதிகமானதால் ஆவேசமாக அவன் எழப் போக,
"ஐயோ ஆத்வி, கொஞ்ச நேரம் உக்காரு டா.. இப்ப என்ன அவசரம் உனக்கு, ஆரு.. ஆரு.. அவ.. அவளுக்கு.. ஹான் அவளுக்கு தலை வலினு நைட்தான் என்கிட்ட சொல்லிட்டு போய் படுத்தா.. அதனால நீ போய் அவளை டிஸ்டர்ப் பண்ணாதே, நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும்" வாய்க்கு வந்ததை உளறி வைத்தாள் மித்ரா.
தடுமாறி பொய் கூறும் மனைவியை குறும்பாக பார்த்து அந்த நிலையிலும் ஆதி கண்ணடிக்க, நெஞ்சம் படபடக்க முகம் சிவந்த மித்ரா, "அமைதியா இருங்க" என மகனை கண் காட்டவும்,
"தனியா மாட்டும் போது இருக்கு டி உனக்கு" மனதில் நினைத்தவன் அடுத்து மகன் கேட்ட கேள்வியில், சிரிப்பை அடக்க முடியாமல் திண்டாடி விட்டான் ஆதி.
"ஏன் மாம்.. தினமுமா அவளுக்கு தலை வலி வருது, அவ அதிகம் கோல்ட் ஐட்டம்ஸ் கூட எடுத்துக்க மாட்டாளே.. ஒருவேளை இந்த மாமா ஏதாவது அக்காவை பண்ணி இருப்பாரோ" யோசனையாக கேட்டவன் தோளில் மெல்லமாக அடித்த மித்ரா,
"டேய். .உனக்கு தான் ஆபிஸ்க்கு நேரம் ஆகுதுன்னு சொன்னேல்ல சீக்கிரம் கிளம்பு, நான் தன்யாவ பாத்துக்குறேன்"
அவனை கடினப்பட்டு அலுவலகம் அனுப்பி வைத்தவளாக, தன்னையே கண்ணெடுக்காமல் பார்க்கும் கணவனின் பார்வையில் இருந்து தப்பிக்க, பேத்தியை தூக்கிக் கொண்டு கிட்சன் ஓடி விட்டாள் மித்ரா. போகும் மனைவியைக் கண்டு கள்ளமாக சிரித்துக் கொண்டான் ஆதி.
ஆத்வி அலுவலகம் சென்ற சில மணி நேரத்தில் எல்லாம், 'ஆதி கிருஷ்ணன்' என்ற பெயர் பலகையை தாங்கி இருக்கும் அந்த பெரிய வீட்டு முன்னால் நின்று, அண்ணாந்து பார்த்த கவிக்கு உள்ளுக்குள் ஏதோ இனம் புரியாத தவிப்பு ஏற்பட்டது.
வாச்மென் கேட்டை திறக்கவும், தன்னுடைய சொந்த அத்தை மாமா வீடு தான் இது என்று அறியாமலே வலது காலை எடுத்து வைத்து வந்த கவி, காலிங் பெல்லை தட்டி விட்டு, கையை பிசைந்துக் கொண்டு பதட்டமாக நின்றிருக்க, கதவை திறந்தாள் ஆரு.
Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 15
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: அத்தியாயம் 15
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.