Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
New member
Messages
16
Reaction score
1
Points
3
அசுரன் 3

"எல்லாம் நல்லா கேட்டுகிட்டியா?"

"எதை சார்?" என்றாள் பயந்து நடுங்கிய விழிகளை தனக்குள் அடக்கி கொண்டே கடும் பிரயத்தனைப்பட்டு அவனிடம் கேட்டாள்.

"ஸ்டுபிட் உன்னை..." கையில் வைத்திருந்த அவனது செல்போனை எடுத்து அவளை அடிக்க கை ஓங்கியவன் விட்டு விட்டான்.

"ஏய் உன்னை போய் எனக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க பாரு எங்கம்மா எல்லாம் அவங்களால வந்தது. அவங்க ஜாதகம், பூஜை, புனஸ்காரம் ஓ காட்" என்றவன் வேகமாக பால்கனியின் கதவு முடி இருக்க வெகு விசையாக ஒரே இலுவையில் இழுக்க அது பட்டென திறந்து கொள்ள, "எல்லாம் என் நேரம்" என்று தலையில் அடித்துக் கொண்டே அவன் சட்டை பையில் இருந்த சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தான்.

"எல்லாம் இந்த அம்மாவால வந்தது. எவ்வளவு தூரம் சொன்னேன் ஆனா ஒரு வார்த்தையாவது கேட்டாங்களா?' சிகரெட்டின் புகையை தனக்குள் உள் இழுத்தபடியே கொஞ்சமேனும் புகையை வெளியே விட்டவன் உள்ளே ஓடிக் கொண்டிருக்கும் மிகப்பெரும் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான் உக்ரானந்த்.

"மா என்ன சொல்றீங்க இது நடக்கவே நடக்காது" தன் எதிரே மேஜையில் வைக்கப்பட்டிருந்த பொருட்களை எல்லாம் தூக்கி போட்டு உடைத்தான்.

உக்ரானந்த் கோபப்பட்டால் கைக்கு எது கிடைக்கிறதோ அது எல்லாத்தையும் தூக்கிப் போட்டு உடைத்து விடுவான். சில நேரங்களில் பக்கத்தில் இருப்பவர்களுக்கும் அடி சன்மானமாக வழங்கப்படும். இது அவன் கோபத்தின் வெளிப்பாடு ஆனால் பையன் குடித்துவிட்டால் அதை பிறகு சொல்கிறேன்.

"ஆனந்த் ஏன் இவ்வளவு கோவப்படுற? உன்ன கல்யாணம் பண்ணிக்க சொன்னதுல உனக்கு என்ன அப்படி ஒரு கோபம்?" என்றார் மித்ரா தேவி.

"அம்மா நீங்க கல்யாணம் பண்ணிக்க சொன்னது ஆஃப்ட்ரால் நம்ம ஆபீஸ்ல வேலை பார்க்கிற ஒரு பொண்ண அவள எப்படி என்னால கல்யாணம் பண்ணிக்க முடியும்" என்று கோபத்தில் கடுகடுப்புடன் அவன் பேச அவன் கோபம் எப்படி என்று நன்றாக புரிந்த மித்ராவுக்குமே குழப்பம் நேர்ந்தது.

"இவனை எப்படி சொல்லி சமாதானம் செய்வது அவளை எப்படியோ சொல்லி தன் வழிக்கு கொண்டு வந்து விட்டாயிற்று இவனை எந்த வகையில் பிளாக்மெயில் செய்ய முடியும்.

அவளோ ஒன்றுமில்லாத நாதியத்தவள் அவளை பிளாக்மெயில் செய்து தன் வசப்படுத்திக் கொள்வது என்பது மிக சுலபமே ஆனால் தன் மகன் தன்னைப் போலவே ஜெராக்ஸ் வைத்து பிறந்திருக்கிறான். அப்படி இருக்க இவனை எப்படி நான் என் வழிக்கு கொண்டு வர வைக்க முடியும்?" என்ற ஆழ்ந்த யோசனைக்கு போனார் மித்ராதேவி.

"ஆனந்த் ஒரு நிமிஷம் நான் சொல்றது முழுசா கேளு கேட்டதுக்கு அப்புறமா மற்றது எதனாலும் பேசிக்கலாம்" என்று அவர் சொல்ல வருவதை கூட அவன் கேட்கவில்லை.

அவன் கண்களில் அப்படி ஒரு செவ்வானத்தை பார்க்க முடிந்தது மித்ராவாள்.

தன் பக்கத்தில் யார் இருக்கிறார்கள் என்ன பொருள் கைக்கு கிடைக்கிறது என்றெல்லாம் பார்க்க மாட்டான் உக்ரானந்த். தூக்கிப் போட்டு ஒரே மி மிதியாக மிதித்து விடுவான். எதை வேண்டுமானாலும் கட்டுப்படுத்த முடியும் மித்ராவால் ஆனால் தன் மகனுடைய கோபத்தை மட்டும் அவரால் இன்று வரையிலும் கட்டுப்படுத்த முடியவே இல்லை. தன்னால் தான் பெற்ற மகனின் கோபத்தை கூட என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் நான் எல்லாம் என்ன தாய் என்றுதான் நினைக்கத் தோன்றும் மித்ராவுக்கு.

"நீ கோபமா இருக்க உன்கிட்ட இப்ப நான் பேச முடியாது நீ இப்ப கிளம்பு பின்னாடி ஒருநாள் பேசுகிறேன் உன்கிட்ட" தன் மகனிடம் சொல்ல, அவனும் கையில் கிடைத்திருந்த அந்த பூச்சாடியை போட்டு உடைப்பதற்காக கையை ஓங்கியவன் திடீரென நிப்பாட்டினான்.

"நோ மாம் எதுனாலும் இப்பவே பேசிருங்க அதுக்கப்புறம் பேசுறதுக்கு நான் வரமாட்டேன்" என சொன்னவனை வித்தியாசமாக பார்த்து வைத்தார் மித்ரா.

"இல்லப்பா நீ ரொம்ப கோபமா இருக்க உன்கிட்ட என்னால இப்போதைக்கு எதுவுமே பேச முடியாது இதுக்கடுத்து ஒவ்வொன்னும் நான் சொல்ல போறது எல்லாத்தையும் கேட்டா நீ கண்டிப்பா என் மேல மேலும் மேலும் கோபப்படத்தான் செய்வ உனக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை நான் செய்யும் போது எப்படி அது சரியா வரும் வேணாம் என் மகன் இந்த 31 வருடம் மட்டும்தான் என்கூட இருக்கான்னு நெனச்சுக்கிறேன்." துக்கத்துடன் வெளியே சொன்னவர் கண்கள் கலங்கியிருந்தது.

தன் அன்னையின் கண்களில் இருந்து வந்த கண்ணீரை கண்டதும் அவன் உள்ளம் பரிதவித்து போனது. ஓடி வந்து தன் அன்னையின் கால்களை தொட்டுவிட்டான். உட்கார்ந்திருந்த அவளின் கால் பாதங்களில் மடிந்து சரிந்து அவளது மடியில் படுத்து ஒரு நிமிடம் ஆழ்ந்த பெருமூச்சு விட்டான்.

"சரி கோபப்படல என்னனு சொல்லுங்க" சொன்னவன் பார்வை தன் அன்னையின் மேல் பதிந்திருக்கவில்லை. கேட்டு தான் ஆக வேண்டும் செய்து தான் ஆக வேண்டும் பிக் பாஸில் சொல்வது போல ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது எனும் நிலை மைக்கு தள்ளப்பட்டு விட்டான் உக்ரானந்த்.

"ஆனந்த்" என சொன்ன மித்ரா ஜோசியர் சொன்ன அனைத்தையும் சொன்னார். பின்பு அவனுக்கு கண்டம் இருப்பதும்,

"உனக்காக நான் பார்த்த அந்த பெண்ணை நீ திருமணம் செய்ய இப்போதைக்க முடியாது ஆனால் நிச்சயமாக அவளை நீ திருமணம் செய்யலாம். அதுவும் ஒரு வருடம் கழித்து உனக்கு நல்ல மாங்கல்ய பாக்கியம் இருக்கும் அந்த சுடரிகாவைத்தான் நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும். அதற்கு பிறகு உனக்கும் அவளுக்கும் விவாகரத்து வாங்கி விட்டு நான் பார்த்த மேனகாவை உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன்" என்றார் மித்ராதேவி.

"மா இட்ஸ் இம்பாசிபிள் எப்படி முடியும் நோ என்னால அந்த பொண்ணு கழுத்துல தாலி எல்லாம் கட்ட முடியாது."

"ஆனந்த் இங்க பாரு ஒரு நிமிஷம் என் முகத்த பாரு" அவன் தாடயை பிடித்து தன் முகத்திற்கு நேராக கொண்டு வந்தார் மித்ராதேவி.

"என்னமா சொல்லுங்க?"

"என் முகத்தைக் கூட உன்னால பார்க்க முடியாது இல்ல?"

"ஓ காட் சென்டிமென்டலா பேசி உங்க பக்கம் என்னை இழுக்காதிங்க உங்க மேல எனக்கு நிறைய அன்பும், பாசமும், மரியாதையும் இருக்கு. அது எல்லாத்தையும் கெடுக்கிற விதமா நீங்க இப்போ ஒன்னு பண்ணிக்கிட்டு இருக்கீங்க பாத்தீங்களா இது என்னால டாலரேட் பண்ணவே முடியல. எப்பதான் இந்த ஜாதகம், பூஜை, புனஸ்காரம் இது எல்லாத்தையும் ஓரம் கட்டி வச்சிட்டு என் உணர்வுகளுக்கு மதிப்பு குடுப்பீங்கன்னு எனக்கு தெரியல மாம். எப்ப பார்த்தாலும் ஏதாவது ஒரு சாக்கு சொல்லி ஜாதகத்தை காரணமாக வைத்து என் வாழ்க்கையில் நீங்க மறுபடியும் மறுபடியும் விளையாடிகிட்டே இருக்கீங்க அது உங்களுக்கு புரியலையா?" என்றான்.

அவனும் சிறு வயது முதல் தொட்டு பார்த்துக் கொண்டேதான் இருக்கிறான். நேரம், காலம் அனைத்தையும் பார்த்து பார்த்து தான் அவனுக்கு ஒவ்வொன்றும் செய்து கொண்டிருக்கிறார் மித்ரா தேவி. அதை எல்லாம் அவன் சிறுவயதில் இருந்தே பார்த்ததனால் அவனுக்கு கோபம் கொப்பளித்து வந்துவிட்டது மனதிற்குள். புலுங்கி வைத்திருந்த கோபம் அனைத்தும் இந்த சூழ்நிலையில் தனக்கு சாதகமாக பயன்படுத்தி வார்த்தைகளை விட்டு விட்டான் உக்ரானந்த்.

இப்படி எல்லாம் தன் மகன் பேசுவானா என்ற அதிர்ச்சியை நீங்காமல் தன் மகனையே பார்த்தவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. தன் அன்னையின் அழுகையை காண சகிக்காமல் அவர் கண்களை துடைத்து விட்டான். அவளுடைய முந்தானை கொண்டே...

"ப்ளீஸ் அழுகாமல் என்ன இருந்தாலும் சொல்லுங்க செய்கிறேன். கோபப்படாதீங்க குறிப்பா அழுகை. உங்க கண்ணுல இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வந்தாலும் அது என்னால தாங்கிக்கவே முடியாதுமா" என்று அவன் உணர்ச்சி நிறைந்த வார்த்தைகளை கூட உணர்வற்று சொன்னான்.

அ... அவ்வளவுதான் அவனுக்கு வரும்.

அவளும் சரி என தலையசைத்து விட்டார். இதற்கு மேலும் தன் மகன் தான் சொல்வதைக் கேட்காமல் இருப்பானா? அந்த அளவுக்கு பாசத்தைக் கொட்டி இவனை வளர்த்து வைத்திருக்கிறேன்.

பாசத்தையா கொட்டி வளர்த்தாய்? ஐயையோ அது அந்த ஆண்டவனுக்கு அடுகாதுமா? உலகில் நடக்கும் அநியாயங்களையும் அக்கிரமங்களையும் கண்டும் காணாமல் இரு என்று தான் சொல்லி வளர்த்திருக்கிறார். உலகத்தின் சுயநலமாக முக்கிய புள்ளியாக நீயாகவே இருப்பாய் என்று சொல்லித்தான் வளர்த்திருக்கிறாள். யாருக்கும் எந்த ஒரு உதவியும் செய்யாதே என்று சொல்லிதான் வளர்த்திருக்கிறாள். இன்னும் நிறைய..., கதையின் போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக அப்பப்போ தெளிச்சு விடுறேன் கேட்டுக்கோங்க.

"ஆனந்த் நீ அந்த சுடரி பொண்ண கல்யாணம் பண்ணிக்கோ அவளுக்கு மாங்கல்ய பாக்கியம் இருக்கு. உனக்கு 31 வயசுல கண்டம்னு ஜோசியர் சொன்னாரு உன் லைஃப்ல எவ்வளவு டேஞ்சரஸ் நடந்திருக்கு அது எல்லாத்தையும் கூட நின்னு தடுத்து நிறுத்திட்டேன் ஆனா இப்போ நடக்க போற இந்த விஷயத்தை என்னால சரி பண்ணவே முடியாது ஆனால் என் தலைமையில் நின்னு உனக்கு கண்டிப்பா செய்ய முடியும் அதுதான் இந்த கல்யாணம் மேனகாவ உனக்கு ரொம்ப பிடிக்கும் அது எனக்கு நல்லாவே தெரியும். ஆனா இப்போதைக்கு அவளை உன்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது. நீ
சுடரிகாவ கல்யாணம் பண்ணிக்கிட்டு இந்த 31 வயசு முடிஞ்சதும் உன்னுடைய கண்டம் தளர்ந்து நீயும் வெளி வந்துவிடுவ. உன்னுடைய 32 வது வயதில் மேனகாவ உனக்கு கல்யாணம் பண்ணி முறைப்படி சுடரிகாவுக்கும் உனக்கும் நடந்த இந்த திருமணத்தை விவாகரத்தும் செஞ்சுருவேன் ஓகேவா? இதுக்கு மேல உனக்கு புரியும்படி சொல்றதுக்கு என்கிட்ட பெரிதாக எதுவும் இல்லப்பா" என்று கைகளை விரித்தபடியே சொன்னதும் தன் அன்னை சொல்வது அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த உக்ரானந்த் தீர்க்கமான ஒரு முடிவை எடுத்தது போல கண்களை கூர்மையாக்கி தன் அன்னையை நோக்கி பார்த்துக் கொண்டிருந்தான்.

"என்ன ஆனந்த் என்ன அப்படி பாக்குற?"

"எல்லாம் சரிதான் ஆனால் அவளை"

" ஏன் அவள மேரேஜ் பண்ணிக்கிறது உனக்கு வேப்பங்காயா கசக்குது அப்படித்தானே? "

"அதை என் வாயால வேற சொல்லனுமா?" சொல்லும்போதே அவன் எரிச்சலுடன் தன் அன்னையை இருட்டுப் பார்த்தான்.

"சரி சரி நீ சொல்றது போல அவளை கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு உனக்கு பிடிக்கல தான் ஆனா ஒரு வருஷம் கண்ண மூடி கண்ணு திறக்கறதுக்குள்ள போயிடும். எனக்காக இல்லைன்னாலும் உன்னுடைய வாழ்க்கைக்காக நீ எனக்கு கடைசி வரைக்கும் வேணும் அதுக்காக ப்ளீஸ் டா நீ போய்ட்டா நானும் உன்னோடு சேர்ந்து போய்டுவேன் அந்த ஜாதகர் சொன்னது எல்லாமே ஒவ்வொன்னா பலிக்குது நான் இதையும் நம்புறேன் இதுக்கு மேலேயும் நம்புவேன் என்னுடைய நம்பிக்கைக்கு எதுக்குமே நீ செவி சாய்க்காமல் போயிருக்கலாம். ஆனால் இந்த ஒரு விஷயத்துல நீ கண்டிப்பா செவி சாய்த்து தான் ஆகணும் ஒரு வருஷம் மட்டும் தானே?" மீண்டும் மீண்டும் மித்ரா சொன்னார்.

தன் மகனிடம் மட்டும் கெஞ்சும் அவரைக் கண்டு மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தான் அவன் சில நேரங்களில் இப்படித்தான் குழந்தைத்தனமாக மாறி தன் மகனுடன் விளையாடுவதும் உண்டு அதே நேரம் அதிகாரம் செலுத்துவதும் உண்டு தன் அவளுடைய கெஞ்சில எல்லாம் பார்த்த வடக்கு மெல்லியதாக சிரிக்க வந்தது எத்தனை எத்தனை பெரிய பெரிய அதிகாரிகளை எல்லாம் தொடக்கப்போட்டு அழைத்து கண்மணி பார்த்தவன் அப்படியே வளர்ந்து கொண்டிருக்கிறான் இப்பொழுது வரையிலும் எனவே தன் அன்னையின் இந்த ஒரு பரிமாணத்தை பார்த்ததும் அவனுக்கு சிரிப்புதான் வந்தது எப்பேர்பட்ட பணக்காரர் இவர் எப்பேர்பட்ட தொழில் அதிபர் இவர் ஆனால் இன்று தன் மகனுக்காக அதுவும் என்னிடம் கெஞ்சுதலாக பேசும் இவளை என்னவென்று சொல்வது" என்று நினைக்கத் தான் தோன்றியது உக்கிரானந்திற்கு.

"ஓகே மாம் பண்ணுங்க பட் ஒன் கண்டிஷன் ஒரு வருஷம் அதுக்கு மேல ஒரு செகண்ட் கூட இந்த வீட்ல அவள் இருக்க கூடாது. எனக்கும் மேனகாக்கும் கல்யாணம் அடுத்த வருஷம் நடந்தே ஆகணும் காட் இட்" என்றான் கூடுதல் எச்சரிக்கையுடன்.

"சரிப்பா இந்த அளவுக்கு ஓகேன்னு சொன்னது எனக்கு ரொம்ப பெரிய விஷயம் தான். நான் கல்யாணத்துக்கு உண்டான ஏற்பாடுகள் எல்லாத்தையும் கவனிக்கிறேன் சொல்லிவிட்டு போனவர் அடுத்தடுத்த நிகழ்வுகள் அனைத்தும் நடந்து முடிந்தது இதோ இருவருக்கும் முதலிரவு ஏற்பாடும் நடந்து முடிந்து விட்டது. சுத்தமாக மித்ராவுக்கும் படிக்கவில்லை அதே நேரம் பிடிக்கவில்லை தான் என்ன செய்வது ஜோசியர் சொல்லி இருக்க நடக்கும் சம்பிரதாயங்களும் சடங்குகளும் நிச்சயமாக நடந்தே தான் ஆக வேண்டும் அம்மையாரே என்று சொல்லிவிட அதற்கு மேலும் இவளால் கட்டுப்படுத்தி வைத்திருக்க முடியவில்லை கோபத்தில் ஜோசியரை ககூப்பிட்டு கிழி கிழி என்று கிழித்து விட்டார் போனிலையே...

"அதுக்கப்புறம் உங்களுடைய விருப்பம் நடக்கும் சம்பிரதாயங்கள் செய்து தான் ஆக வேண்டும். இருவருக்குள்ளும் தாம்பத்தியம் நடக்கிறதோ இல்லையோ ஆனால் சடங்கும் சம்பிரதாயமும் ரொம்பவும் முக்கியம்" என்று மீண்டும் அவர் எடுத்துரைத்த பின்பு செய்யவே வேண்டாம் பண்ணவே கூடாது என்று நினைத்து வைத்திருந்தவர் அடுத்த கட்டமாக செய்த ஒரே வேலை இருவருக்கும் சாந்தி முகூர்த்தம் ரெடி செய்து அவளை அறைக்குள் தள்ளியதுதான். உள்ளே போனவளிடம் கேட்ட கேள்வியில் அவள் புரியாது திருத்திருவென முழித்திருக்க, அவன் கோபமாக வெளியே பால்கனியில் வந்து நின்று தன் அன்னையுடன் சிறிதொரு நாட்களுக்கு முன்பே நடந்த காரசாரவிவாதங்களை நினைத்துக் கொண்டே இருந்தவன் எத்தனை சிகரெட் புகைத்தான் என்று கணக்கில் அடங்காதவை. அது எல்லாம் தூக்கி வீசி இருந்தானா இல்லை தரையில் போட்டு மிதித்தானா யாரு கண்டா கேமரா வைத்து பார்த்துக் கொண்டா இருக்க முடியும்.

அவன் பால்கனியை விட்டு அறைக்குள் வந்தான். அவள் இன்னும் நின்ற இடத்தில் சிலையாக நின்று கொண்டிருந்தாள்.

"ஏன் உட்காரக்கூட மாட்டாளா கால் வலிக்காதா இவளுக்கு?" அவனையும் அறியாமல் தோன்றிய எண்ணத்தில்,

அய்யய என்னது இது இப்படியெல்லாம் யோசிக்கிறேன்" என யோசித்தவாரே,

"இது நீ இல்லடா உக்ரன் அவளுக்கு கால் வலிச்சா உனக்கு என்ன கால் வலிக்காம இருந்தா உனக்கு என்ன மூடிக்கிட்டு போய் படுடா" என்று மனசாட்சியை காரி துப்பியபடியே அவன் படுக்கையில் வந்து விழுக அவளோ பேந்த பேந்த விழித்தாள்.

கேட்ட கேள்விக்கு தலையும் புரியாமல் வாழும் புரியாமல் முழித்துக் கொண்டு இருந்தவள் திடீரென போனா வந்தான் ரிப்பீட்டு என்பது போல வந்து படுத்து அவன் உறங்கிவிட இவளுக்கு தான் ஒரே கேள்வி மேலே படுப்பதா கீழ் படுப்பதா என்ற கேள்வியின் ஆராய்ச்சியில் உச்ச ஸ்தானத்தில் நின்று கொண்டிருந்தாள் பெண்ணவள்.

"லைட்டை அணைச்சிட்டு படு" என்று அவன் சொல்லவும் அவ்lo மேலும் பிடித்தால் சிறிது நேரம் வரை இரவின் விளக்கு எரிந்து கொண்டே இருக்க கோபம் உற்றவனாய் திரும்பி அவளை ஒரு பார்வை பார்த்தவன்,

"சொன்னது காதுல விழுகலையா?" என்று சொன்னதும்,

"சுவிட்ச் பாக்ஸ் எங்க இருக்கு" என்று கேட்டால் அதோ லெப்ட் சைட் என்று அவன் கை காமிக்க அவளும் விளக்கை அணைக்க போக "ஒரு நிமிஷம் சார்" என்றாள். அவனோ,

"என்ன வேணும் இருக்கிற கோவத்துல உன்னை ஏதாவது பண்ணிட போறேன்" என அவன் மீண்டும் கோபமாக கேட்க அவளோ பயந்து நடுங்கி,

"சார் நான் எங்க படுகிறது மேலே படுக்கட்டுமா இல்ல கீழ படுத்துக்கட்டுமா?" என்று அவள் கேட்கவும் கோபமாக அவளை பார்வையுடன் பார்த்தவன் படுக்கையில் இருந்து இறங்கி அவள் முன்னே வந்து நின்றான்.

'இந்த கேள்வியெல்லாம் கேட்க உனக்கு எப்படி தைரியம் வருது? நீ என்னை பொறுத்த வரைக்கும் என்கிட்ட வேலை செய்ற சாதாரண ஒரு எம்பிளாய் தான். பச்சை தமிழ்ல சொல்லணும்னா ஒரு வேலைக்காரி வேலைக்காரிக்கு இடம் எது தெரியுமா அதோ" பால்கனியை காமித்து அவன் சொல்ல அவளோ உள்ளுக்குள் நெருங்கி போய் அழுதாள்.

ஒரு தலையணையும் ஒரு பெட்ஷீட்டையும் எடுத்து அவளின் கையில் கொடுத்து,

"அங்க போய் படு. என்னைய நிம்மதியா கொஞ்ச நேரம் இருக்க விடு. உன் கழுத்துல தாலி கட்டினதுல இருந்து எனக்கு அப்படியே பத்திக்கிட்டு வருது" ஆக்ரோஷமாக பேசி கொண்டிருந்தவன் காதுகளில் டடொயிங... டொயிங் என மெசேஜ் டோன் அடிக்க அவன் படுத்திருந்த பக்கத்து சிறு டேபிளில் அந்த போன் ரீங்காரமிட்டது யார் என்று போய் பார்க்க மேனகா தான் அதற்கு பின்பு அவனது முகம் மந்தகாசமாய் சிவந்தது மெல்லமாக வாயுக்கள் மனு முனுமுனுத்தபடியே செய்ய மெசேஜ் டோன்கள் என போய்க் கொண்டே இருந்தது. இவள் அவன் தன் கையில் கொடுத்திருந்த அந்த தலையணையும் பெட்ஷீட்டையும் வாங்கிக் கொண்டு பால்கனியில் விரித்து படுத்து விட்டாள். உறக்கம் தான் வருவேனா என்றது.

கண்களில் கண்ணீர் சொட்டு சொட்டாக தலையணையை மெல்ல மெல்ல நினைக்க எப்போது உறங்கிப் போனாள் என்று அவளுக்கு தெரியவில்லை.

அப்படி என்றால் இவள் அவனை தோணுதுல எனக்கும் தோணுது இனி வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம்.

அசுரன் தொடர்வான்.
 
Last edited by a moderator:

Author: shakthinadhi
Article Title: அசுரன் 3
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top