Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Member
Messages
53
Reaction score
8
Points
8
ரதி 34

சூர்யாவும் நிலாவும் அந்த பீச் ஹவுஸ்யில் பேசி கொண்டு இருக்க சூர்யாவோ " இந்த விசயத்தை நான் பாத்துக்குறேன், எலி இனிமே நீ சந்தோசமா இரு " என்றான்

அவளும் சரி என தலை அசைக்க இருவரும் கைகளை கோர்த்து கொண்டு அந்த கடற்கரை சாலையில் கால்கள் மண்ணில் புதைய நடந்து சென்றனர்.

---

மறுநாள் காலை....


தேவ் - ரதி, ராகவன் - பல்லவி, வீர் - ஆத்யா என அனைவரும் நிலா மற்றும் சூர்யாவை அவர்களின் புதிய வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அங்கே இருந்து நிலா கல்லூரி செல்ல ஆரம்பித்தாள். சூர்யாவும் பிசினஸ் பார்க்க சென்று விட்டான். இரண்டு நாட்கள் கழித்து இரவு வீட்டிற்கு தாமதமாக வந்த சூர்யா குடி போதையில் தள்ளாடிய படியே வர நிலாவோ " குடிச்சீங்களா மாமா " என்றாள்

அவனோ ' ஆமா அதுக்கு என்ன எலி குட்டி ' என்றான்

அவளோ ' இன்னும் என்ன பழக்கம் எல்லாம் மறைச்சி இருக்கீங்க ' என்றாள் கோபமாக

அவனோ " ஏன் நீ மறைக்கல உன் காதல " என்றான்

அவளோ அதிர்ந்து நிற்க அவனே மேலும் தொடர்ந்தான் ' என்ன பாக்குற உன்ன அன்னக்கி கடத்தி வச்சி இருந்தது நான் தான் ' என்றான்

அவளோ ' ஏன் மாமா இப்படி பண்ணீங்க நான் உங்களுக்கு என்ன பாவம் பண்ணேன் ' என கேக்க

அவனோ ' ஆமா உன்னால தாண்டி என் கதிர் கோமக்கு போய்ட்டான், அவன் சாக காரணம் நீ ' என கூற

' அதுக்கு எப்படி நான் காரணம் ஆவேன்' என்றாள்

அவனோ ' ஆமா நீ தான் காரணம் காதல் என்கிற பெயர்ல அவன கொலை பண்ண பார்த்த ராட்சசி ' என கத்த

அவளோ " அதுக்கும் இந்த கடத்தல் நாடகத்துக்கும் என்ன சம்மந்தம் " என்றாள்

அவனோ ' நல்லா கேளு நான் மட்டும் அவன் இல்லாம கஷ்டப்படணும் நீ இனொரு தான் கூட போய் சந்தோசமா இருப்பியா அதான் உன்ன கடத்தி உன் கல்யாணத்தை நிறுத்தினேன், ஆனா என் ரதிம்மா அழகுறதை பாக்க முடியல அதான் உன்ன அப்படியே போடின்னு விட்டுட்டேன் ' என்றான்

அவளோ அதிர்ச்சி மாறாமல் நிற்க அவனோ அப்படியே சோபாவில் படுத்து உறங்கி விட்டான். மறுநாள் காலை எழுந்த சூர்யா கண்டது என்னவோ தன்னையே பார்க்கும் நிலாவை தான் அவனோ " என்னாச்சு ஏன் அப்படி பாக்குற " என கேக்க

அவளோ ' ஏன் மாமா என்ன கடத்துனீங்க ' என்றாள்

அவனோ ' அப்ப நைட் எல்லா உண்மையும் தெரிஞ்சி கிட்ட ரைட், சரி இனிமே ஏன் மறைக்கணும் எல்லாத்தையும் சொல்றேன் கேளு உன்ன கல்யாணம் பண்ணாதே என் பிரண்ட் கதிர் தற்கொலை முயற்சிக்கு உன்ன பழி வாங்கத்தான் அண்ட் இனிமே நீ எனக்கு அடிமை நான் சொல்றத மட்டும் செய்யணும் ' என கூற

அவளோ ' நான் எதும் பண்ணல மாமா ' என்றாள்

அவனோ ' பச்! ' சலிப்பாக காதை குடைந்து கொண்டு ' இங்க பாரு எலி உன் கதை எல்லாம் எனக்கு வேணாம் நீ அவன காதலுக்குறேனு ஏமாத்தமா இருந்தின இந்நேரம் அவன் நல்லா இருந்து இருப்பான் ' என்றான்

அவளோ " எதாவச்சு நான் கதிர காதசிச்சேன்னு சொல்றிங்க " என்றாள்

அவனோ அவளின் இடது கை மணிகட்டை காட்டி இந்த சூர்ய- சந்திர படத்துக்கு என்ன அர்த்தம் எலி என கேக்க

அவளோ மௌனமாக தலை குனிந்தாள். அவனே மேலும் தொடர்ந்தான் " என்கிட்ட அவன் நிறைய முறை சொன்னான் எலி உன்ன காதலிக்குறேன் அதனால தான் நீ இந்த டாட்டூ கூட அவன் கூட போய் போட்டுக்கிட்டான்னு ஆனா கடைசியில இப்படி ஆகும்னு தான் நினைக்கவே இல்லை " என்றான்


அவளோ " நிஜமா நான் அவன காதலிக்கவே இல்ல மாமா " என்றாள்

அவனோ ' இனிமே என்ன என்கிட்ட மறைக்க போற எலி போ போய் உன் வேலைய பாரு ' என அகிம்சை முறையில் பெண் அவளை தண்டிக்க முடிவு செய்து விட்டான்.

---
அன்று முதல் நிலா பேச வந்தாலும் அமைதியாக வெளியே சென்று விடுவான், அவள் சமைத்த உணவை அப்படியே வைத்து விட்டு வேறு உணவை சமைத்து உண்பான். நிலாவோ அவன் தன்னை பார்க்க மாட்டானா, பேச மாட்டானா என ஏங்கி சரியாக உண்ணாமல் உறங்காமல் சுற்றி கொண்டு இருந்தாள். தன்னை வார்த்தைகளால் வதைத்து இருந்தாள் கூட அவள் தாங்கி இருப்பாள் ஆனால் இப்படி மௌனமாக தாண்டிப்பதை தான் அவளால் ஏற்று கொள்ள முடியவில்லை.


மாலை நேரம் கல்லூரி முடிந்து வெளியே பார்க்கிங் வந்த நிலாவை வழி மறித்து நின்ற கார்த்திகேயனோ " என்ன மன்னிச்சிரு நிலா அன்னக்கி எதோ புத்தி கேட்டு போய் பேசிட்டேன், நீ ஓகே சொன்ன நாம பழைய படி நண்பர்களா இருக்கலாமா " என கேக்க

அவளோ ' நோ தேங்க்ஸ் ' என வேக வேகமாக அவள் காரில் வெளியே சென்று விட்டாள்.

கார்த்திகேயனும் செல்லும் அவளையே வன்மதோடு பார்த்து கொண்டு இருந்தான்.


---

மாலை நேரம்....

இதமான குளிர் காற்று மேனியை வருட அமைதியாக அந்த சாலையில் பயணித்து கொண்டு இருந்தாள் தூரிகை நிலா அவள் மனமோ ஆசை காதலனை கரம் பிடித்தும் சேர்த்து வாழ முடியாததை எண்ணி ஊமை கண்ணீர் வாடிக்க


இங்கே மருத்துவமனையில்....


சூர்யாவோ கோமாவில் இருக்கும் கதிர் வேந்தனை பார்த்து " எப்ப டா மச்சான் கண்ணு முழிப்ப என்னால முடியல டா " என புலம்ப ஆண் அவனின் மனமோ ஆறு மாதங்களுக்கு மூன் சென்றது.....

அப்போது தான் சூர்யா mba முடித்து விட்டு அவன் இன்டர்நேஷிப் சென்ற அலுவகத்தில் அவன் ஆருயிர் தோழன் கதிரோடு வேலைக்கு சேர்ந்தான். சிறு வயது முதல் ராகவனும் பல்லவியும் மருத்துவமனை சென்று விட தனித்து இருந்த சூர்யாவோ சில நேரம் ரதி வீட்டில் சில நேரம் வீரா - மீனாட்சி யோடு இருப்பான். ஆனால் அவன் மனதில் வெறுமை மட்டுமே குடி கொண்டு இருந்தது அதை மாற்றவே அவனுக்கு தோழனாக அறிமுகம் ஆனவன் தான் கதிர் வேந்தன்.

இருவரும் சிறு வயது முதல் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தனர். ஸ்கூல் முதல் காலேஜ் வரை ஒன்றாக முடித்தவர்கள் ஒன்றாகவே வேலைக்கும் சென்றனர். அந்த வேளையில் தான் நிலாவும் இவர்களோடு சேர்ந்து மூன்று பெரும் நல்ல நண்பர்களாக இருந்தனர்.

தாய் தந்தை மருத்துவர்கள் என்பதால் என்னவோ அவனுக்கு அதை பிடிக்கவே இல்லை அதனால் தான் அவனும் சரி நிலாவும் சரி mba படிக்க முடிவு செய்தனர். நிலா கதிரை நல்ல நண்பனாக தான் பார்த்தாள். அதனால் தான் இருவரும் சென்று டாட்டூ போட்டது. அதன் பின் தான் கதிர் சூர்யாவை சந்தித்து " மச்சான் ஒரு முக்கியமான விசியம் சொல்லணும் " என்றான்

சூர்யாவோ ' சொல்லு கதிர் என்ன சொல்லணும் ' என்றான்

அவனோ ' அது நான் நிலாவா லவ் பண்றேன்னு சொன்னேன்ல இன்னக்கி அவ கிட்ட லவ் சொல்ல போறேன் டா மச்சான்' என்றான்

சூர்யாவோ ' இப்ப என்ன அவசரம் டா உங்களுக்கு அவ படிச்சி முடிக்கட்டுமே ' என்றான்

அவனோ ' இல்ல டா அது நேத்து நிலா கையில சூரியன் - சந்திரன் சேர்ந்து இருக்க மாதிரி டாட்டூ போட்டுக்கிட்ட அப்ப அவளுக்கும் என் மேல ஒரு இன்டேரெஸ்ட் இருக்கு போல அதான் நானே போய் முதல சொல்ல போறேன் ' என்றான்

அவனும் சரி எதோ பண்ணு என வேகமாக வெளியே சென்று விட

அதன் பின் தன் நண்பனை அடிபட்ட காயங்களோடு மருத்துவமனையில் தான் கண்டான். நண்பனின் மொபைல்லில் ஏதேனும் இருக்குமா என்று அதை சோதனை செய்து பார்த்தான் ஆனால் அதில் ஒரு ஆடியோ மட்டும் " சாரி மச்சான் நான் காதல சொன்னதுக்கு நிலா என்ன அசிங்கமா பேசிட்டா மச்சான் இனிமே நான் வாழ மாட்டேன் சாக போறேன் டா " என்பதோடு அது முடிய சூர்யாவோ அதிர்ச்சியாக நின்றான்.

அவன் மனமோ நிலா தான் இதற்கு காரணம் என்பதை ஏற்க முடியாமல் தவிக்க அவனும் வேறு ஏதேனும் ஆதாரம் கிடைக்குமா என தேடி பார்த்தான். அவனுக்கு கிடைத்த தகவல் படி கடைசியாக நிலாவை பார்த்து விட்டு வந்த கதிர் மாடியில் இருந்து கீழே குதிக்க முயற்சி செய்து உள்ளான் என்பது மட்டுமே.

இந்த நிலையில் தான் கார்த்திகேயன் அவன் அன்னையோடு வந்து நிலாவை பெண் கேட்டது, தேவ் முடிவுற்காக நிலாவும் சம்மதம் சொல்லியது, பின் அவளை பழி வாங்க பெண் அவளை கடத்தி திருமணத்தை நிறுத்தி தானே கல்யாணம் செய்து கொண்டான் சூர்யா. ஆனால் அன்று சூர்யா தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு நடந்தது என்ன? என்ற கேள்வியோடு இருந்தான் சூர்யா.

தொடரும்....
 

Author: Nithya
Article Title: ரதி 🩵 34
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top