Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Member
Messages
53
Reaction score
8
Points
8
அத்தியாயம் 33

ஒரு வாரம் கழித்து....


ஆர். எம். பேலஸ் முழுவதும் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு பண்டிகை போல காட்சி அளித்தது. வீட்டின் எந்த பக்கம் பார்த்தாலும் சொந்த பந்தங்கள் கூட்டம் கூட்டம் நின்று கதைகளை பேசி சிரிக்க சிறிய குழந்தைகள் எல்லாம் ஓடி பிடித்து விளையாடி கொண்டு இருந்தனர். வாசலில்

கவிசூர்யன்
💞 வெட்ஸ் 💞
தூரிகை நிலா
என பூக்களால் அலங்காரம் செய்து இருந்தனர்.
பட்டு வேட்டி சட்டையில் ஆண்மையின் இலக்கணமாக முழு கம்பிரதோடு மண மேடையில் அமர்ந்து ஐயர் கூறும் மந்திரங்களை கூறி கொண்டு இருந்தான் கவிசூரியன். " பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ " என்ற ஐயரின் குரலுக்கு பிங்க் நிற பட்டு உடுத்தி மிதமான ஒப்பானைகளோடு தலையில் அரளி மலர்கள் சுடி தேவ லோக ராணி போல ஆத்யாவின் கைகளை பிடித்து நடந்து வந்தாள் தூரிகை நிலா.

ஐயர் மங்கள கயிறை சூர்யாவின் கையில் தர அவனோ ஒரு முறை நிலாவின் கண்களை ஆழ்ந்து பார்த்து பெண் அவளின் சங்கு கழுத்தில் கட்டி அவனின் சரிபாதியாக மாற்றி கொண்டான். முகத்தில் குழப்பமும் மகிழ்ச்சியும் கலந்து இருக்க பெரியவர்களின் ஆசியோடு தன் ஆசை காதலன் சூர்யனின் மனைவி ஆனால் தூரிகை நிலா.

இருவரும் சபைக்கு வணக்கம் வைத்து திருமணத்தை முடிவு செய்து தேவ் - ரதி, ராகவன் - பல்லவி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க நால்வரும் முகத்தில் சந்தோச கண்ணீரோடு ஆசி வழங்கினர்.

பின் விருந்தினர்கள் அனைவரும் சென்று விட ஹால் சோபாவில் இருவரையும் அமர வைத்து பால் பழம் கொடுத்தாள் பல்லவி. நிலாவோ பாலை வெறித்து பார்க்க சூர்யாவோ முழுவதும் பாலை குடித்து விட்டு அவள் கையில் பழத்தை மட்டும் கொடுத்தான். அவளோ கேள்வியாக பார்க்க ' அதான் உனக்கு பால் பிடிக்காதுல எலி சோ பழம் மட்டும் சாப்புடு போதும் ' என்றான்

அவளும் அமைதியாக அதை உன்ன ஆரம்பித்தாள். அப்போது தான் ராகவன் அங்கே வந்து ' பாப்பா பால் உனக்கு பிடிக்கலைன்னா குடிக்காத டா ' என்றான்

அவளோ ' நான் குடிக்கல மாமா சூர்யா தான் குடிச்சிட்டாங்க ' என்றாள்

ராகவனும் மகனிடம் ' பார்த்துக்கோ ' என கூறி விட்டு சென்று விட்டார்.

---
வீர் அறை....


போதும் விடு ருத்து... என சிணுங்கி கொண்டே கூறினாள் ஆத்யா. வீரோ ' ஹேய் அதி இது எல்லாம் அநியாயம் தெரியுமா, இன்னக்கி புற உன் மேல வச்ச கண்ண என்னால எடுக்கவே முடியல பொண்டாட்டி அவளோ அழகா இருந்த, சரி இப்ப தான் பிரீயா ஒரு முத்தம் கொடுக்கலாம்னு உன்ன கூட்டிட்டு வந்தேன் ஆனா அதுக்குள்ள போதும்னு சொல்ற ' என கேக்க

அவளோ ' இது சாயங்கால நேரம் ருத்து.. வீட்ல யாரவது எதாவது நினைப்பாங்க டா ' என அவன் செய்த குறும்பில் கன்னம் சிவக்க கூற

அவனோ சிவந்த கன்னத்தில் முத்தம் வைத்து ' யாரும் ஏதும் நினைக்க மாட்டாங்க வரும் போது தான் பார்த்தேன் எல்லாரும் தூங்குறாங்க ' என்றான்

அவளோ ' சரி கொஞ்சம் கைய எடுடா ஒரு மாதிரி இருக்கு ' என்றாள்

அவனோ அப்ப நைட் வச்சிக்கவா என பெண் அவள் காதில் எதோ கூற

அதை கேட்ட அவளும் 'ச்சீ! என வெக்கம் கொண்டு ' ருத்து டாக்டர் மாதிரி பேசு டா இப்படி பொறுக்கி மாதிரி பேசாத ' என கூற

அவனோ ' நான் பொறுக்கிய பொறுக்கி என்ன பண்ணுவான் தெரியுமா ' என கூறி பெண் அவளின் இதழில் புதிய கவிதை ஏற்ற ஆரம்பித்தான். அவளும் விரும்பியே அதை ஏற்று கொண்டாள்.

---
மொட்டை மாடியில்....

மாடியில் ஓரமாக இருந்த நீள் இருக்கையில் தேவ் கையை பிடித்து கொண்டு அவன் தோளில் தலை சாய்த்து அமர்ந்து இருந்தாள் ரதி. சூரியன் மறையும்போது வானம் சிவப்பு நிறத்தில் மாறியது. இரவு வானம் கருமை பூச ஆரம்பிக்க ரதி தான் பேச்சை ஆரம்பித்தாள் " ஏன் தேவ் நீ சந்தோசமா இருக்கியா " என்றாள்

தேவ்வோ மேலும் ரதியை இருக்கி அணைத்து கொண்டு ' எனக்கு என்ன குறை அம்மு அழகான ரெண்டு பசங்க இப்ப அவங்களுக்கும் கல்யாணம் ஆகி அவங்க லைப் பாக்க போறாங்க அப்புறம் நீ இன்னும் 25 வருசத்துக்கு முன்னால நான் பாத்த குழந்தை ரதி மாதிரியே என் பின்னாடி தேவ் தேவ்னு சுத்தி வர அதுவும் இல்லாம நான் பார்த்த மட்டும் மருதாணி மாதிரி சிவக்குற இந்த கன்னம் இன்னும் என்ன வேணும் சொல்லு ' என்றான்

ரதியோ ' இன்னும் இருக்கு தேவ் இதே மாதிரி எப்பவும் உன் கைய இருக்கி பிடிச்சிட்டே என் கடைசி மூச்சு வர இருக்கனும் ' என்றாள்

அவனோ ' கண்டிப்பா இதே மாதிரி எப்பவும் நாம ஒன்னாவே இருக்கலாம் என்னாலயும் என் அம்மு இல்லாம இருக்க முடியாது ' என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.

வாலிபம் குறைந்தாலும் இன்னும் காதல் மட்டும் குறையவில்லை இருவருக்கும் பெண் அவளை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காமல் மீண்டும் அவன் காதல் பார்வை வீச அவளும் தெரிந்தே ஆழி போன்ற அந்த கண்ணில் தொலைந்து தான் போகிறாள்.

---

அன்று இரவு எந்த சடங்கும் வேண்டாம் என சூர்யா கூறி விட தங்கள் பிள்ளைகளின் புரிதலில் மனம் புரித்து தான் போயினர் தேவ் - ராகவன் இருவரும். நிலா அறை பால்கானியில் நின்று நிலவை வெறித்து கொண்டு இருந்தாள். அப்போது அங்கே வந்த சூர்யாவோ ' என்ன எலி குட்டி ரொம்ப யோசனையா இருக்க போல ' என்றான்

அவளோ ' நாம வெளிய போலாமா மாமா ' என கேக்க

அவனோ அவள் முகத்தை கைகளில் ஏந்தி ' என்ன ஆச்சு எலி உனக்கு ஒரு மாதிரி இருக்க யாரவது எதாவது சொன்னாங்கல சொல்லு டி ' என கேக்க

அவளோ ' அதெல்லாம் ஒன்னும் இல்ல கொஞ்ச நாளா வீட்டுக்குள்ளவே இருக்க ஒரு மாதிரி இருக்கு அதான் வெளிய போகலாமா ' என்றாள்

அவனோ ' நீ கேட்டு இல்லாமையா வா போகலாம் ' என அவளை அழைத்து கொண்டு வெளியே சென்று அவன் புல்லட் வண்டியில் அழைத்து சென்றான். இருவரும் அந்த ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில் சென்று கொண்டு இருக்க நிலாவோ அவன் வயிற்றை கட்டி கொண்டு தோளில் முகம் வைத்து கொள்ள சூர்யாவோ மீண்டும் ' எதாவது சொல்லனுமா எலி குட்டி ' என்றான்

அவளோ ' எதுவும் இல்லை ' என கூற

அவனோ வண்டியை அழகிய qஅலை கடலின் சத்தம் மட்டும் கேக்கும் அந்த சிறிய பீச் ஹவுஸ் மூன் நிறுத்தினான். நிலாவோ ' இது யார் வீடு மாமா ' என்றாள்

அவனோ ' வா உள்ள போகலாம் ' என அந்த மென்மையான மஞ்சள் விளக்கு ஒளியில் பொறுமையாக அழைத்து கொண்டு வீட்டின் உள்ளே சென்று ' எலி வீடு நல்லா இருக்கா ' என்றான்

அவளோ இவ்வளவு நேரம் இருந்த சோகம் மறைந்து ' ம்ம். நல்லா இருக்கு மாமா ஆனா இப்ப எதுக்கு இங்க வந்தோம் ' என்றாள்

அவனோ ' எதோ இந்த ஸ்மைல் உன் முகத்துல பாக்க தான் என் எலி என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டது பிடிக்கலையா ' என்றான்

அவளோ ' அதெல்லாம் இல்ல மாமா ' என்றாள் அவாசாரமாக

அவனோ ' அப்ப என் டி ஒரு மாதிரி இருக்க ' என கேக்க

அவளோ அவள் மொபைல்லில் இருந்த ஒரு ஆடியோவை ஆன் செய்து காண்பித்தாள். அதில் ஒரு ஆண் குரல் ' எப்படி நீ சந்தோசமா இருக்கேனு பாக்குறேன் நிலா உன்னால என் நண்பன் கதிர் செத்து போய்ட்டான் ஆனா நீ மட்டும் சந்தோசமா இருக்கியா இனிமே தான் உன் வாழ்க்கையில நரகத்தை பாக்க போராடி ' என்பதோடு அது முடிய

சூர்யாவோ ' யார் அனுப்புனா எலி இந்த ஆடியோ வா ' என்றான்

அவளோ ' தெரியல மாமா ஆனா யாரோ கதிர் பெயரை எல்லாம் சொல்லி அவங்க சாவுக்கு நான் தான் காரணம்னு சொல்றாங்க ' என்றாள்

தொடரும்....

நிலாவை கொடுமை செய்யம் சூர்யா நடந்தது என்ன?
 

Author: Nithya
Article Title: ரதி 🩵 33
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top