Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Administrator
Staff member
Messages
279
Reaction score
215
Points
63
அத்தியாயம் - 33

கவி அப்படி சொன்னதும் அதிர்ந்து போய் செய்துக் கொண்டிருந்த வேலைகளை அப்படியே நிறுத்தி விட்ட ஸ்வாதி, "என்ன கவி பேசிட்டு இருக்க, திடீர்னு ஏன் உனக்கு இப்டியெல்லாம் யோசிக்க தோணுது..

அதுவும் உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்காம நான் எப்டி கல்யாணமெல்லாம்.. லூசு மாறி எதையும் யோசிச்சு குழப்பிக்காம ஒழுங்கா போய் வேலையப் பாரு.." படபடவென மொழிந்தவளாக விட்ட வேலைகளை தொடர,

"நான் ஒன்னும் லூசு மாறி உளறல ஸ்வாதி, உன்கிட்ட கல்யாணம் பண்ணிக்கோன்னு தெளிவா தான் பேசிட்டு இருக்கேன்.." அழுத்தம் திருத்தமாக கவி சொல்லவும் கோவம் தான் வந்தது ஸ்வாதிக்கு.

"ஏய்.. என்ன விளையாடுறியா, இப்ப தான் நாமளே வேலை கிடைச்சி, வயித்துக்கு போக ஏதோ கொஞ்ச காசு சேத்து வைக்க தொடங்கி இருக்கோம்.. இப்ப போய் எனக்கு கல்யாணம் அது இதுனா, என்னால முடியாது கவி..

அதுவும் உன்ன தனியா விட்டுட்டு எல்லாம் என்னால ஒரு வாழ்க்கைய தேடி போக முடியாது.. முதல்ல உன்ன ஒரு நல்ல இடத்துல கல்யாணம் பண்ணி தரணும், அப்புறம் தான் என் வாழ்க்கை.."

பொட்டில் அடித்ததை போல அவள் உறுதியாக சொல்வதை கேட்டு கவிக்கு ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தாலும், அவளுக்கு அமையக் கிடைக்கும் நல்வாழ்க்கையை தட்டி விட்டு சுயநலமாக யோசிக்க அவள் விரும்பவில்லை.

"ஸ்வாதி நீ புரிஞ்சி பேசுறியா இல்ல புரியாம பேசுறியானு எனக்கு சத்தியமா புரியல, நானும் நீயும் ஒன்னா டி.. எனக்கு இருக்க குறைக்கு எனக்கெல்லாம் கடைசி வரைக்கும் கல்யாணம் நடக்குறதுங்கிறகு கனவுல தான் நடக்கும்..

ஆனா உனக்கு அப்டி இல்ல ஸ்வாதி, எனக்காக நீ உன் வாழ்க்கைய வீணாகிக்க நான் விரும்ப மாட்டேன்.. எனக்காக நீ இவ்ளோ தூரம் யோசிக்கும் போது, உனக்காக நான் யோசிக்கக் கூடாதுனு சொல்றியா ஸ்வாதி.." என்றதும் இதயம் படபடக்க அவளை தான் கண்டாள்.

"உன்ன ஒருத்தர் உயிருக்கு உயிரா விரும்புறாரு, ரொம்ப ரொம்ப நல்லவர் பேமிலிய பத்தி சொல்லவே வேண்டாம் எல்லாருமே ஸ்வீட் பர்சன்ஸ்..

உன்ன சந்தோஷமா ரொம்ப நல்லா பாத்துப்பேன்னு எனக்கு அவர் வாக்குறுதி கொடுத்திருக்கார். எனக்கும் அவர் மேல நிறைய மதிப்பும் மரியாதையும் இருக்கு, நான் முடிவு செஞ்சிட்டேன் அவர் தான் உனக்கு மாப்பிளைனு..

இனிமே இதை பத்தி பேச ஒண்ணுமே இல்ல, அவருக்கு ஒரு அண்ணன் இருக்கார், அவர் கல்யாணம் முடிஞ்சதும் உன்ன கல்யாணம் பண்ணிருக்கறதா சொல்லி இருக்கார்.. கல்யாணத்துக்கு தயாரா இரு.." படபடவென பட்டாசாய் பொறிந்த கவி, பையை எடுத்துக் கொண்டு வெளியே ஓடி விட்டாள்.

ஆனால் ஸ்வாதி தான் அவள் பேசியதெல்லாம் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருந்தாள். அவளுக்கு முதலில் நியாபகம் வந்தது அவள் மனதில் இருப்பவனோ வேறு யாரோ அல்ல, கவி மட்டும் தான் அவள் எண்ணம் முழுக்க நிறைந்து இருந்தாள்.

எப்படி அவள் தன் குறையை முன்னிறுத்தி தன்னோடு ஒப்பிட்டு பேசலாம் என்ற கோபம் தலைத்தூக்கி நின்றது. எந்த விதத்திலும் அவள் குறை அவளுக்கு பெரிதாக தெரியக் கூடாது என்பதில் கவனமாக இருந்து, பார்த்து பார்த்து அவளை குழந்தையாக பாவித்து ஒவ்வொன்றும் செய்தது எதுவும் பலனில்லாமல் போனதா!

அப்போது அவள் அனைத்தையும் மனதிலே வைத்து புழுங்கி தவித்திருக்கிறாளா! வெளியே எனக்காக சிரித்துக் கொண்டு இருக்கிறாளா! என்று நினைக்கும் போதே மனம் வெதும்பி அழுகை வந்தது.

அன்றில் இருந்து ஸ்வாதி, கவியிடம் பேசுவதை முற்றிலுமாக நிறுத்தி இருந்தாள். அதற்காக தனது கடமைகளை செய்யாமல் நிறுத்தி விடவில்லை. கவிக்கு தேவையான அனைத்தையும் செய்து முடித்து விடுவாள். கவி ஒவ்வொரு நாளும் அழுவாத குறையாக கெஞ்சி கொஞ்சி பேசிப் பார்த்தும், ஸ்வாதி மனம் இரங்குவதாக இல்லை. இருவரும் பேசிக் கொண்டு நாட்கள் கடந்து விட்டது.

அதை எல்லாம் நினைத்தபடி அமர்ந்திருந்த ஸ்வாதி, 'தான் கவியிடம் பேசாமல் மனதலவில் வந்தங்கி போய் துன்பப்படுவதை போல் தானே, அவளும் தன்னிடம் பேசாமல் துன்பம் கொள்வாள்..' வருத்தமாக நினைத்து உடனே அவளிடம் பேசி விட வேண்டும் என்று மனம் எகிறி குதித்தாலும், அடுத்த நொடியே அவள் பேசியதை நினைத்து மீண்டும் முருங்கை மரம் ஏறிக் கொள்ளும்.

அந்த யோசனையில் கணினித்திரையை வெறித்தபடி அமர்ந்திருந்தவளின் அலைபேசி ஒளிரவும், எண்ணைக் கூட கவனிக்காது எடுத்து காதில் வைத்தவளுக்கு, அடுத்து பேச வார்த்தை வராமல் இதயமெல்லாம் பூ பூக்கசெய்தது.

"ஹெலோ ஸ்வாதி லைன்ல இருக்கியா" பேசியது யாதவ் தான். அவன் குரல் கேட்டதும் போனை எடுத்து எண்ணைப் பார்க்க, நெஞ்சமெல்லாம் குளிர்ந்து சாரல் காற்று வீசியது.

"ம்ம்.. இருக்கேன் ஸ்.சொல்லுங்க ஸ்.சார்" என்றவளுக்கு தான் எத்தனை பதட்டம்.

உதட்டுக்குள் சிரித்துக் கொண்டு மல்லாக்க அடித்துப் படுத்துக் கொண்ட யாதவ், "ம்ம்.. அப்புறம் என்ன பண்ணிட்டு இருக்க ஸ்வாதி.." என்றான் மெல்லிய குரலால்.

"அ.அது வேலை தான் பாத்துட்டு இருக்கேன் சார்.."

"இல்லையே ஏதோ நினைப்புல சும்மா உக்காந்து இருக்கேன்னு தானே உனக்கு போன் போட்டேன்.." என்றதும் நெஞ்சம் திக்கென்று அடித்துக் கொள்ள,

"அது.. அது வந்து ஸ்.சார் ந்.நான்.." அவள் திணறிக் கொண்டு இருப்பது, அங்கு ஒருவனுக்கு கொண்டாட்டமாக இருந்தது.

"ஹ்ம்.. சொல்லு, எது நீ வந்து.." அவளை போலவே அவன் பேசிக் காட்ட, அடுத்த வார்த்தை பேச முடியாமல் உள்ளுக்குள் ஒருமாதிரியான உணர்வில்,

"எப்டி இருக்கீங்க சார்" என்றாள் தன்னையும் மீறி வந்த அக்கறையான வார்த்தையில். அதை கேட்டு, பனிக்காற்று வீசியதை போல் உள்ளம் குளிர்ந்துப் போனான் ஆடவன்.

"ம்ச்.. உன்ன பாக்காம ரொம்ப சேடா இருக்கேன்னு சொன்னா மேடம் என்ன பண்ணுவீங்க.." பெருமூச்சு விட்டு ஏக்கமாக சொன்ன விதத்தில், இவள் கண்மூடி மெல்லிய சிரிப்பை உதிர்த்து நெஞ்சில் கை வைத்துக் கொண்டவளாக, ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருக்க,

"என்ன பேச்சையே காணல.." அவன் தான் கேட்டது.

"ஸ்.சார் வேலை இருக்கு வச்சிடட்டுமா.." அவனிடம் பேச ஆசை தான், ஆனால் திடீரென யாதவ் ஃபோன் செய்து பேசுவது பதட்டத்தை உண்டு பண்ணியது பெண்ணுக்கு.

"வச்சி தான் ஆகணுமா ஸ்வாதி.." என்றான் ஒருமாதிரி குரலில்.

"பின்னே வைக்காம என்ன பண்ண சொல்றீங்க, இங்க இருக்கும் போது எப்பவும் எம்மேல கடுகடுன்னு தானே இருப்பீங்க, இப்ப மட்டும் என்னவாம்.." வெகுநாளாக மனதில் உருத்திய கேள்வி இன்று சற்று உரிமையாக வெளிவந்தது.

"ஏன்னா அங்க நான் உன் எம்டி டி.. அதுமட்டுமில்ல, என்கிட்ட வம்பு பண்ணதுக்கு நானும் உன்கிட்ட கோவமா வம்பு செஞ்சேன் சிம்பிள்.." என்றதும் அடப்பாவி என வாயடைத்து போனவள்,

"உங்க வம்பு சேஷ்ட்டை எல்லாம் முடிஞ்சிடுச்சா இல்ல மிச்சம் இருக்கா.." செல்லக் கோவம் வந்து விட்டது அவளுக்கு.

"ஏதே முடிஞ்சிதா.. இனிமே தாமா ஐயோயோட முழு சேட்டையும் வம்பும் நிறைய நிறைய உன்கிட்ட தொடங்க வேண்டி இருக்கு, அதுக்குள்ள முடிச்சிக்கிட்டா எப்டி.." இருவேறு அர்த்தங்களில் அவன் மொழியவும் வெட்கத்தில் உடல் கூசி சிலிர்த்த பாவை,

"அச்சோ சார் நான் வச்சிடுறேன்.." அதற்கு மேலும் அவனிடம் பேச முடியாமல், முகம் சிவந்து அழைப்பை துண்டிக்க, அங்கு யாதவ் முகத்தில் புன்னகை ததும்பி, வெற்று போனால் நெற்றியில் தட்டிக் கொண்டு புரண்டு படுத்தான்.

ஏற்கனவே அவளுக்கு வேலை அருமையாக ஓடும், இனிமேல் சொல்லவா வேண்டும்! தனிமையில் சிரித்துக் கொள்வதும், கீபோர்டில் ஏதேதோ எழுத்தை தட்டி விளையாடுவதும் பின் அழிப்பதும், திடீரென "அச்சோ.." என வெட்கம் கொண்டு முகத்தை மூடி குனிந்துக் கொள்வதுமாக நேரம் போனது ஸ்வாதிக்கு.

அவளின் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த செந்தில், இவை அனைத்தையும் வயிறு புகைய பார்த்தபடி இருந்தவன், அவள் யாதவோடு பேசியதை ஒட்டுக் கேட்டு விட்டான்.

"நான் லவ் பண்றேன்னு சொல்ல வரும்போதெல்லாம் என்ன அவாய்ட் பண்ணிட்டு, என்ன விட நல்லா பெரிய பார்ட்டிக் கிடைச்சதும் அவன்கிட்ட குழைஞ்சி வெக்கமா படுற.. விட மாட்டேன் டி, எனக்கு நீ ஒன் யூஸ்க்காவது கெடச்சே ஆகனும்..

நான் தூக்கி போடுற உன்ன வேற எவன் வேணும்னா கொத்திட்டு போகட்டும், எனக்கு அதன்பிறகு எந்த கவலையுமே இல்ல.." வக்கிர எண்ணத்தை மனதில் நினைத்தவன், அவளை அடைய என்ன வழி என்ற ப்ளானையும், தீவிரமாக யோசிக்கத் தொடங்கலானான்.

«« «« »» »»

ஆத்வி ஒருவனை தவிர மற்ற அனைவரும் விக்ரம் அறையில் தான் தவிப்போடு நின்று கொண்டு இருந்தனர்.

"கவி என்னாச்சி மாமாக்கு கண் விழிச்சிட்டார்ன்னு சொன்ன, ஆனா வந்து பாத்தா எப்பவும் போலவே படுத்திருக்காரே.." மித்ரா ஆனந்தக் கண்ணீரை துடைத்தபடி வினவ,

"ஆமா ஆண்டி, அங்கிள் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கண் முழிச்சாரு, நான் என்ன ஏதுன்னு செக் பண்றதுக்குள்ள என்னையே உத்து பாத்துட்டு இருந்தவரு, என்ன என்னவோ பேர் சொல்லிக் கூப்ட்டு திரும்பவும் மயக்கத்துக்கு போய்ட்டாரு.." சற்று முன் நடந்தவற்றை கவி சுருக்கமாக சொல்லவும், மருத்துவர் அவசரமாக வரவும் சரியாக இருந்தது.

பின் மருத்துவரிடம் நடந்ததை கூறியதும் உடனே விக்ரமை பரிசோதித்த மருத்துவர், "இனிமே கவலை பட ஒன்னும் இல்ல, விக்ரம் கொஞ்சம் கொஞ்சமா குணமாகிட்டே வரார்.. இன்னைக்கு கண் திறந்து பேசுற வரைக்கும் முன்னேற்றம் அடைஞ்சிருக்கார்ன்னா, கூடிய சீக்கிரம் அவர் ப்பர்ஃபெக்கட்டா குணமடைய 99% வாப்பிருக்கு.." என்றதும் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சி தாளவில்லை.

"கவி வந்த நேரமும், அவ அக்கறையா பாத்துகிட்ட விதத்திலயும் தான் இன்னைக்கு என் மாமா திரும்பவும் பழையபடி குணமடைய போறார்.." என்றபடி கவியை கட்டிக் கொண்ட மித்ரா, மகிழ்ச்சியில் தலை கால் புரியாமல் இருந்தாள்.

ஆருவும் கவிக்கு நன்றி சொல்ல, அந்த மகிழ்ச்சி நிறைந்த சூழலில் சங்கடமாக உணர்ந்தாள் கவி.
ஆதி அஜய் எப்போதும் போல் வேடிக்கையாளர்கள் தான்.

அஜயை தத்தெடுத்து வளர்த்த தந்தைக்கு உடல் நல்க்குறைவு ஏற்பட்டு விட, மீண்டும் ஆரு அவள் கணவன் வீட்டிற்கு செல்ல வேண்டிய நிலை. ஆனால் இதில் மித்ராக்கு தான் உடன்பாடே இல்லை.

குடும்பங்களை மொத்தமும் ஒரே நாளில் இழந்து வாழும் மித்ராக்கு, கணவன் மற்றும் பிள்ளைகள் தான் உலகம். வருடத்தில் பாதி நாட்களை ஏதாவது காரணம் சொல்லி மகள் பேத்தி மருமகன் மூவரையும் கூடவே வைத்துக் கொள்வாள். சிறு வயதில் இருந்தே தனியாக உறவுகள் அற்று வாழ்ந்த அஜயும், அவர்கள் மனமறிந்து நடந்துக் கொள்வான்.

ஆனால் இப்போது போக வேண்டிய கட்டாயம், போய் தானே ஆக வேண்டும்.

"ஆருமா பத்திரமா போய்ட்டு வா, தன்யாவ பாத்துக்கோ.." பல அறிவுரைகளுக்கு நடுவில் அவர்களை அனுப்பி வைத்த மித்ரா, இப்போது தான் மகளை திருமணம் செய்து வழி அனுப்பி வைத்தது போல, கண்ணைக் கசக்கிக் கொண்டு நிற்கும் மனைவியை ஆயாசமாக கண்டான் ஆதி.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 33
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top