Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Administrator
Staff member
Messages
279
Reaction score
215
Points
63
அத்தியாயம் - 32

ஆத்வியின் செயலில் செய்வதறியாத நிலையில் கற்சிலை போல கவி அசைவற்று நிற்க, பின்னால் இருந்து அவளை அணைத்துக் கொண்ட கள்ளனோ, கண் மூடியபடி அவள் பின்னங்கழுத்தில் ஈர இதழ்கள் கொண்டு சிறு சிறு முத்தங்களை வைத்து கிறங்கிப் போனவன்,

"பேபிஇஇ.. என அவள் செவியருகில் உதடுக் குவித்து உஷ்னக்காற்றை வெளியிட, கண் சொக்கி தலையை சாய்த்தவளின் உணர்வுகள் யாவும், வேறொதோ நினைவில் மொட்டு மலர செய்தது.

"மாமாஆஆ.." அவள் வாயில் இருந்து முணுமுணுப்பாக வந்த வார்த்தையில், கிறக்கம் தெளிந்த ஆத்வி சட்டென அவளை விட்டு பிரிந்து நிற்கவும், கவியும் உணர்வுகள் பெற்று திருத்திருவென முழித்தவளாக ஆத்வியை பார்க்க. "யாரு டி அவன்" என்றவன் வார்த்தையில் தான் எத்தனைக் கடினம்.

"ய்.யாரு.." திரும்பவும் அவனிடமே கேட்டு வைக்கவும் வெறியாகிப் போன ஆத்வி,

"அதான் இப்ப எவனையோ செல்லப் பேர் வச்சி கூப்ட்டியே.." சிவந்த விழிகளால் அவளை ஊடுருவியபடி மீண்டும் நெருங்க, எச்சிலை விழுங்கியவள் ஆத்வியின் முகத்தை உற்று நோக்கியபடி பின்னால் அடியெடுத்து வைத்தவளுக்கு இதயத்தில் பெரிதாக பூகம்பம் ஏற்பட்ட அதிர்வு.

அடிக்கடி கனவில் தோன்றி இம்சை செய்து, ஆழ் மனதில் காதலனாக புதைந்திருக்கும் சிறுவயது மாமாவின் முகமும், தன் முன்னே மிக அருகில் நிற்கும் ஆத்வியின் முகமும் ஒத்து போவதை போல உணர்வில், மனம் குழம்பிப் போனாள் கவி.

இத்தனை நாளும் ஆத்வியை பார்க்கயில் இப்படி ஒரு உணர்வு தோன்றியதில்லை. ஆனால் இன்று, ஆணவனின் மெல்லிய ஸ்பரிசத்திலும், மிக மிக நெருக்கத்தில் பார்த்த அவனது முகத்தையும் கண்டு, உள்ளுள்ள உண்டான தவிப்போடு ஆத்வியை கண்டாள்.

கோவத்தில் சிவந்த முகமாக தன்னை நெருங்கியவனை கண்டு மிரண்டு போன கவி, இவனை சந்தித்த நாளில் இருந்து நடந்தவைகளை எண்ணி வேதனை கொண்டவளாக,

"இவன் தான் என் கனவுல வந்து என்னை அரவணைக்கிற என் மாமாவா..? இல்ல வேற யாரோவா..!" கனவையும் நிஜத்தையும் எண்ணி குழம்பிய கவி,

"அப்படி இவன் தான் என் மாமாவா இருந்தா, அன்னைக்கு இவன் சொன்னது போல, நிச்சயம் என் குறைகளை முன்னிறுத்தி என்னை இவன் ஏற்றுக்கொள்ளவே மாட்டான்.. வேண்டுமென்றே மட்டம் தட்டிப் பேசுவான்..

கனவுல வந்து எங்கிட்ட கொஞ்சி பேசி செல்லம் கொஞ்சும் என் மாமா இவனாக இருக்கவே முடியாது.. நான்தான் என் மனசப் போட்டு குழப்பிகிறேன் போல.. என் கனவுல வர மாமா லேசா மங்களா தானே தெரிவார், அதுல வந்த குழப்பமா இருக்கும்.. இந்த சிடுமூஞ்சி முரடன் என் மாமா இல்ல, அவர் வேற ஒருத்தர்.." என அவளாகவே முடிவெடுத்து தன்னை சமாதானம் செய்துக் கொண்டாலும்,. மனமோ சொல்ல முடியா துயரத்தில் தவித்துப் போனது.

அவள் எதிர்ப்பார்ப்பு என்ன என்று அவளுக்கே புரியவில்லையே! ஒரு மனம் ஆத்வி தான் தன் மாமாவா என்று மகிழ்ச்சிக் கொண்டாலும், மற்றொரு மனமோ இவன் மட்டும் என் மாமாவா இருக்கவே கூடாது.. " என படபடவென அடித்துக் கொண்டது மற்றொரு மனம்.

ஆனால் நிதர்சனத்தை மாற்ற முடியுமா என்ன! கவியின் நினைப்பையும் தாண்டிய அவள் உள்மனது, தன் கனவு மாமாவின் உருவத்தை முற்றிலுமாக ஆத்வியோடு பொருத்திக் கொண்டது.

மனம் ஒரு குரங்கு என கவி விடயத்தில் சரியாக போனது.

கவி பதில் சொல்லாமல் யோசனையில் மூழ்கியதைக் கண்ட ஆத்வியின் மேலும் அதிகரிக்க செய்ய, "ஏய்.. உன்கிட்ட தான் டி கேட்டுட்டு இருக்கேன் பதில் பேசு.." வன்மையாக அவள் தோள் பிடித்து உளுக்கவும், வலியில் முகம் சுணங்கிய கவி,

"எ.என்ன ப்.பேச சொல்றீங்க, காபி எடுத்துக்க சொன்னா, நீங்க என்கிட்ட எல்லை மீறி நடக்கப் பாக்குறீங்க.." என்றவளுக்கு அவன் கண்களை கண்டு தடுமாறும் மனதை அடக்க வழி தெரியவில்லை.

அவள் தினம் கனவில் பார்க்கும் அதே கூரியக் கண்கள், அவளை கண்டு சிரிக்கும், செல்லமாக முறைக்கும், சில நேரங்களில் உரிமையாக கனவிலே எல்லை மீறும். இப்படி பல வித உணர்ச்சிகளை காட்டும் மந்திர விழிகள் அல்லவா அவனுடையது எப்படி தடுமாறாமல் இருக்க முடியும்.

"ஒரு பார்வை பார்க்கின்றாய்..
உயிர் சுண்டி இழுக்கின்றாய்..
உன்னை எண்ணில் விதைக்கின்றாய்..
சுகமாய் சுகமாய் வதைக்கின்றாய்..

நெருப்பாக கொதிக்கின்றாய்..
மறு நொடியே குளிர்கின்றாய்..
உறக்கத்தை கெடுக்கின்றாய்..
மனதில் நுழைந்து குதிக்கின்றாய்.."

இப்பாடல் பின்னணி இசையாக bgm போட்டு அவள் மனதில் ஒளித்துக் கொண்டு இருக்க, "அப்டியா இருக்கு இவன் பார்வை.." மீண்டும் அவன் பார்வையை சந்திக்க நினைக்கயில், உடல் உதறிப் போனாள் அவனது கோவ விழியில்.

"என்ன டி நான் பாட்டுக்கு பைத்தியக்காரன் மாறி கத்திட்டு இருக்கேன், நீ நின்னுட்டே எவனோட கனவுல டூயட் பாடிட்டு இருக்க.." கடுமையாக கத்தியக் கத்தில் நெஞ்சிக்கூடு அதிர கை வைத்து பிடித்துக் கொண்டவளுக்கு,

"உன் கூட தான் டா கூறுகெட்ட முரட்டு மாமா.." என சொல்லத் துடித்த நாவை அடக்கிக் கொண்டு, "நான் போகணும் கீழ ஆண்டி தேடுவாங்க, இந்த காபிய பிடிங்க.." அவசரமாக அவன் முன் நீட்டிய கவி, அவன் எப்படியும் வாங்க மாட்டான் என உணர்ந்தவளாக, அங்கிருந்த மேஜையில் வைத்து விட்டு ஒரே ஓட்டமாக அவனிடமிருந்து தப்பி ஓடி விட்டாள்.

அவள் போன திசையை வெறித்தவனுக்கு இன்னும் கோவம் அடங்கவில்லை. தன்னோடு அவள் இருக்கையில் வேறு ஒருவனை மனதில் நினைத்தபடி, கவி கண் சொக்கி நின்ற பின்பம், இன்னும் அவன் கண்ணை விட்டு அகலவில்லை.

தலையை அழுத்தமாக கோதிக் கொண்ட ஆத்வி, "நான் உன்கிட்ட நெருங்கி வந்ததுக்கு எப்பவும் போல கோவப்பட்டு வெடிச்சிருந்தா கூட போனா போகுதுனு விட்டுருப்பேன் டி, ஆனா நான் தொடும் போது வேற ஒருத்தன நெனச்சதும் இல்லாம, அவன உரிமையா மாமானு சொன்னியே.. பத்தி எரியிது டி என் உடம்பு..

இதுக்காக நீ பதில் சொல்லியே ஆகனும் கவிஇஇ.." சினமாக பற்களைக் கடித்து உருமிக் கொண்ட ஆத்வி, அந்த ஆறிப் போன காபியை குடிக்கப் பிடிக்காமல் கீழே வந்தான்.

அவன் கண்ணில் படாமல் ஓடி ஒளிந்து கொண்டாலும், முற்றிலுமாக குழம்பிய கவியைப் பார் என்ற கதையாக தான் அவள் நிலை இருந்தது.

நாட்கள் மெல்ல மெல்ல மாதமாக கடந்து நகர்ந்துக் கொண்டிருக்க, கவி ஆத்வியின் கண்ணில் படாதவாறு கவனமாக இருந்து வந்தாள். தன் சந்தேகத்தை யாரிடம் எப்படி கேட்பதென தெரியவில்லை.

ஆத்வி யார்? முற்றிலுமாக குழம்பிய மனநிலை, சரியாக உண்ண கூட முடியவில்லை அவன் நினைவில். நாளுக்கு நாள் திருட்டுத்தனமாக மறைந்து நின்று அவனை பார்க்கும் தனது திருட்டுப் பார்வையை, எதை கொண்டு குருடாக்கிக் கொள்வது என தெரியாது தவித்துப் போனாள் கவி.

யாரோ குறுகுறுவென பார்ப்பது போல் தோன்றி, உடல் சிலிர்த்த உணர்வில் சுற்றி முற்றி பார்வையை அலைமோத விட்டு, ஏதோ ஒரு எதிர்பார்ப்போடு ஆவலாக அவன் தேடினால், ஏமாற்றமே மிஞ்சி சோர்ந்து போவான் ஆத்வி. அவளைப் பார்க்க முடியாதபடிக்கு வேலை வேறு அவன் நேரத்தை மொத்தமாக இழுத்துக் கொள்கிறது.

இன்னும் எத்தனை நாட்கள் இந்த கண்ணாம்பூச்சி ஆட்டத்தை இருவரும் ஆடுவரோ! விரைவில் ஆட்டத்தை முடிவுக் கட்ட மேலிருப்பவன் முடிவுக் கட்டிவிட்டான், அதற்கான நாளையும் குறித்து வைத்துக் கொண்டு.

ஹரிதா வேறு தினமும் கணவனை பார்க்க வருகிறேன் என்று ஆத்வியின் அலுவலகம் வந்து அவனை கடுப்படிக்கிறாள். அவனும் ஏதோ ஒரு காரணத்திற்காக பல்லைக் கடித்துக் கொண்டு, இல்லாத பொறுமையை இழுத்துப் பிடித்து அமைதி காத்து வருகிறான்.

ஆத்வியின் திருமணமும், லடக் ரெய்டும் ஒன்றாக வரவிருந்தது. இதற்குள் என்னென்ன அசம்பாவிதங்கள் நடக்கக் காத்திருக்கிறதோ!

******

ஸ்வாதி, தனது பின்னே சுற்றும் செந்திலை இம்மியளவும் கண்டுக் கொள்வதே இல்லை. தான் உண்டு தனது வேலை உண்டு என இருந்து விடுவாள்.

அன்றும் செந்தில் அவன் காதலை அவளிடம் கூற, ஸ்வாதியின் பின்னாலே நாயை விட கேவலமாக அலைந்துக் கொண்டிருக்க, அவள் அவனை பார்த்தால் இல்லை. ஸ்வாதியின் நிராகரிப்பு அவனுக்கு பெரும் கோவத்தை தான் ஏற்படுத்தியது.

இது போதாதென, யாதவ் வேறு இல்லாமல் போனது செந்திலுக்கு வசதியாகி போய் விட, தனக்கென தனியாக கொடுத்த சிஸ்டத்தை விட்டு, ஸ்வாதியின் பக்கத்து சிஸ்டத்தில் மாற்றி அமர்ந்துக் கொண்டான், எப்போதும் அவளை கண்காணிக்க.

அன்றும் அதே போல தான், ஸ்வாதி தனது வேலையைப் பார்த்துக் கொண்டு இருந்தாலும் மனம் என்னவோ கண்டபடி அலைமோதிய நிலையில், சிறிது நாட்கள் முன் கவி சொன்ன வார்த்தைகள் தான் மனதை போட்டு பிசைந்துக் கொண்டு இருந்தது.

"ஸ்வாதி உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.." புதிதாக பர்மிஷன் எல்லாம் கேட்டு தயக்கமாக நின்ற கவியை கண்டு நெற்றி சுருக்கியவள்,

"என்ன டி எங்கிட்ட பேச இவ்வளவு தயக்கமா கேக்குற, என்ன பேசணுமோ தாராளமா பேசு.." என்றாள் புன்னகைத்தபடி.

தோழியின் புன்னகை கண்டு சற்றே ஆசுவாசம் அடைந்த கவி, ஆழ்ந்த மூச்செடுத்தவளாக, "நான் என்ன சொன்னாலும் செய்வியா ஸ்வாதி.." என்றாள் மொட்டையாக.

"என்ன டி இப்டி கேட்டா நான் என்ன சொல்றது, சரி அப்டி நீ என்ன சொல்லப் போற, நான் செய்யாம போக.." துவைக்கப் போட்ட அழுக்கு துணிகளை எல்லாம் உதறி எடுத்தபடி கேட்டிட,

"நீ கல்யாணம் பண்ணிக்கணும் ஸ்வாதி.." என்ற கவி பெரிய குண்டாக அவள் தலையில் இறக்கி இருந்தாள்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 32
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top