Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Administrator
Staff member
Messages
279
Reaction score
215
Points
63
அத்தியாயம் - 14

கதிரவன் மெல்ல மெல்ல தன் இணையான பறந்து விரிந்த பிரபஞ்சத்தில் வஞ்சனையின்றி தன் கதிர்களை வாரி இறைக்கத் தொடங்கிய பொன்னான நேரம்.

கண்களை கசக்கிக் கொண்டு உடலை முறுக்கியபடி கண் விழித்த ஆத்வி, கட் பனியன் அணிந்திருந்த தனது திமிறிய புஜத்தில் குட்டி தலையை வைத்து கன்னத்தை அழுத்திக் கொண்டு, தன் மேல் குட்டி கால் கைகளை போட்டுக் கொண்டு, வாய் பிளந்து ஜொள்ளு விட்டபடி சுகமாக உறங்கும் அக்கா மகளை சிறு சிரிப்போடு ரசித்து பார்த்தான்.

"இந்த தன்யா குட்டி எப்போ வந்து படுத்தா' என்ற நினைப்போடு அவள் நெற்றியில் மென்முத்தம் ஒன்று பதித்தவன், குட்டியின் உறக்கம் கலையாதவாறு மெத்தையில் மெதுவாக படுக்க வைத்து எழுந்த ஆத்வி, வேர்க்க விறுவிறுக்க உடற்பயிற்சி செய்ய தொடங்கினான்.

அங்கு பழசாரு எடுத்து வந்த மித்ரா, அதன்யா படுத்திருப்பதை கண்டவளாக, "வாலு, இவ எப்ப இங்க வந்தா" இவளும் நினைத்தபடி குழந்தையின் கன்னத்தை இதமாக வருடி விட்டு, ஆத்வியிடம் செல்ல, உடலில் உள்ள வியர்வை எல்லாம் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது அவன் புஷ்ஷப் எடுத்துக் கொண்டிருக்கும் வேகத்தில்.

"ஆத்வி" என்றபடி உள்ளே வந்த மித்ரா, அவன் வெறித்தனமாக உடற்பயிற்சி செய்வதை கண்டு சலித்துக் கொண்டாள், "அப்பாவை போலவே பிள்ளைகள்" என்ற நினைப்பில்.

சிறு வயதில் இருந்தே அப்பா மகள் மகன் என மூவரும் சேர்ந்து, மித்ரா வெறிக்க வெறிக்க பார்க்க வைத்து ஒன்றாக உடற்பயிற்சி செய்து அவளை வெறுப்பேற்றி விடுவர். அதுவும் ஆரு இவனுக்கும் மேல். தன்யா பிறந்து சற்று உடல் கூடியதில் குடி மூழ்கியது போல ஆனவள், இன்றளவும் கடுமையான உடற்பயிற்சியில் சீரோ சைசில் வளம் வந்து, அஜயை அவள் இடையில் சொருகி வைத்திருக்கிறாள்.

"வாட் மாம்.." என்றவனுக்கு மூச்சி வாங்க வேகம் இன்னும் கூடியது.

"போதும் ஆத்வி, ஏன் இவ்ளோ வேகம், நீ என்ன பாக்க தொப்பையும் தொந்தியுமாவா இருக்க, இவ்ளோ கடுமையா எக்ஸர்சைஸ் செய்ய.. ஒருநாளைக்கு ஒரு அரைமணி நேரம் செஞ்சா போதாதா" என்றபடி ஜூசை மேஜையில் வைத்து விட்டு, சம்மமிட்டு அமர்ந்தவன் முகத்தில் வழியும் வியர்வையை முந்தானையால் துடைத்தெடுத்தாள்.

"மாம்.. நீங்க சொன்ன தொப்பையும் தொந்தியும் பிற்காலத்தில வர கூடாதுனு தான், இவ்ளோ கஷ்டப்பட்டு எக்ஸர்சைஸ் பண்றதே.. டாட பாத்திங்கள்ல இந்த வயசுலும் எப்டி எனக்கே டஃப் கொடுக்குறாருன்னு, நாளைக்கு நானும் என் புள்ளைக்கு ஈடா இருக்க வேணாமா.." வரிசை பல் தெரிய சிரித்துக் கொண்டே சொன்ன மகனை வாயில் கை வைத்து, அடப்பாவி என ஆச்சிரியமாக பார்த்த மித்ரா,

"டேய்.. உனக்கு இந்த ஆசையெல்லாம் வேற இருக்கா.. அதுவும் உங்க அப்பா கூட போட்டி போடுற.." செல்லமாக முறைத்த தாயை கண்டு நகைத்தவன்,

"நான் என்ன சாமியாரா மாம்.. ஆசை இல்லாம இருக்க, நீங்க இன்னும் ஹீரோயின் கேரக்டர் விட்டு வெளிய வரலைன்னு நினைக்கிறேன், அதான் என் கதையிலும் வந்து உங்க கேரக்டர் விட்டு வெளிய வராம இருக்கீங்க, என் கதைய விட உங்க ரெண்டு பேர் அலம்பல் தாங்கலன்னு ஆடியன்ஸ் மத்தில ஒரே பேச்சி.." கண்ணடித்து அவன் கூற. அவன் தலையில் மெல்லமாக தட்டிய மித்ரா,

"உனக்கு உங்க அப்பாவ போல சாமார்த்தியம் பத்தல டா, அதான் இன்னும் எங்க கதையே ஓடுது.. அவர் என்னைய 13 வது எபிசோட்ல எல்லாம் கல்யாணமே கட்டிக்கிட்டாரு நீயும் இருக்கியே.." என போற போக்கில் அவன் காலை வாரி சென்றாள் மித்ரா.

தலையை தேய்த்தபடி போகும் தாயை புன்சிரிப்புடன் பார்த்தவன், அதுவரை இருந்த இயல்பு மறைந்து கடுமையாக மாறிய முகமெங்கும் கோபத்தில் சிவந்தது.

"கல்யாணம் தானே மாம், கூடிய சீக்கிரம் பண்ணிக்கிட்டா போச்சி" வில்லங்கமாக நினைத்தவனின் கண்முன் வந்து போன கவியின் சிரித்த உருவத்தை குரூரமான எண்ணி, "கீப் வெயிடிங் பேபி, நீ கொடுத்ததை மிச்சமில்லாம திருப்பி கொடுக்க நான் வந்துட்டே இருக்கேன்"

அவள் மாறி மாறி அறைந்த கன்னங்களை தடவி பல்லிடுக்கில் இறுக்கமாக மொழிந்த ஆத்வி, "நா.. ரெடி தான் வரவா.. மாமன் நா.. இறங்கி வரவா.. தேள் கொடுக்கு சிங்கத்த சீண்டாதப்பா.. எவன் தடுத்தும் என் ரூட்டு மாறதப்பா.."' தனக்கு ஏற்றபடி பாடலை மாற்றி அமைத்துப் பாடிக்கொண்டு, தன்னுடய புது அலுவலகம் செல்ல பரபரப்பாக தயாராக தொடங்கினான்.

******

"டேய் கேடி.. இப்பவாச்சி சொல்லு தன்யா எங்கே டா" ஒற்றை போர்வைக்குள் தன் கழுத்து வளைவில் இதழால் கவி எழுதிக்கொண்டிருக்கும் அஜயின் பிடரியைப் பற்றி, முறைப்பாக கேட்டாள் ஆரு.

"அவ நல்லா சேஃபா தூங்கிட்டு இருப்பா ஆரு டார்லிங், நீ கொஞ்சம் என்ன என் வேலைய செய்ய விடு டி ரொம்ப நாளாச்சு, அதுவும் நம்ம ரெண்டுபேர்க்கான டைம்ல நீ சொல்ற இந்த டா இருக்கே.. எவ்ளோ போதை ஏறுது தெரியுமா உன்மேல"

இரவு முழுதும் மனைவியின் மேல் தீராத ஆசையில் அவளோடு உருண்டு பிரண்டும், காதலும் மோகமும் குறையாமல் கைகள் அலைபாய, உதடுகள் கோலமிடவும் கூச்சத்தில் நெளிந்தாள் ஆரு.

"போதும் அஜய், நேரமாச்சி எக்ஸர்சைஸ் பண்ணிட்டு கீழ போகணும்" வாய் தான் மொழிந்தது, உடலோ கணவனுக்கு இலகுவாக ஒத்தொழைத்துக் கொண்டிருந்தது.

தன்னவளின் உடல் மொழியை தெளிவாக உணர்ந்தவன், "அதான் நைட்ல இருந்து ஹெவியான எக்ஸர்சைஸ் போகுதே டி விதவிதமா.. இதுக்கு மேலயும் செய்ய போறியா ஆரு" குறும்பு மின்ன அவளோடு நர்த்தனம் ஆடியவனை வெட்கம் கொண்டு செல்லமாக அடுத்தவள்,

"எப்போ தன்யாவ இங்கிருந்து பேக் பண்ணீங்க அஜய்" பதில் தெரியாமல் அவள் விடுவதாய் இல்லை அவனை.

ப்ச் .. என அலுத்துக் கொண்டவன், "உன்ன ரொம்ப நாள் கழிச்சி நேத்து சேலைல பாக்கவும் என்ன என்னால கண்ட்ரோல் பண்ணவே முடியல குட்டிமா.. எப்படா சான்ஸ் கிடைக்கும்னு பாத்துட்டே இருந்தேன்..

நைட் உன்ன கட்டி பிடிச்சிட்டு நம்ம போட்ட குட்டி நல்லா தூங்கிட்டு இருந்தா, அவள வச்சிட்டு உன்ன நெருங்க முடியுமா.. அதான் அவளை உன் தம்பி ரூம்ல படுக்க வச்சிட்டு வந்துட்டேன்" என்ற கணவனை முறைக்க முயன்று தோற்ற ஆரு,

"சான்ஸ் கிடைச்சிடுச்சா என் செல்ல புருஷனுக்கு" அவன் மூக்கை பிடித்து கொஞ்ச,

"சான்ஸ் கிடைக்காம தான் கட்டில் குலுங்குதா ஆருகுட்டி" கிறங்கள் மொழி பேசியவன் நேரத்தை வினயம் செய்யாமல், அவள் இதழ் கவ்வி ருசிக்க தொடங்கி விட்டான்.

*******

பாதி பல் துளக்கிய வாயில் நுரை ததும்ப, செய்திதாளை விரித்துப் பார்த்தபடி நைட்டியை வேட்டி போல் மடித்துக் கட்டிக்கொண்டு "கவி இங்க பாரு டி" பத்தாவது முறையாக ஸ்வாதி கத்த,

அப்போதே தூங்கி எழுந்து அரைத்தூக்க கலக்கத்தில் அமர்ந்திருந்த கவி, "என்ன ஸ்வாதி காலைலயே கவி கவினு ஏலம் போட்டு கத்திட்டு இருக்க" என்றவளுக்கு இன்னும் உறக்கம் கலையவில்லை.

"ஏய்.. முதல்ல அந்த கண்ணாடிய எடுத்து போடு கவி, அப்ப தான் நான் காட்றது தெரியும்" அவசரமாக சொன்ன ஸ்வாதி, ஆமை போல் நெளிந்தவளை கண்டு "இவ சரிவர மாட்டா" என தானே அவள் கண் கண்ணாடியை எடுத்து கண்ணில் மாட்டி விட்டாள்.

அன்று ரெஸ்டாரெண்ட் விட்டு கிளம்பியதும், இரண்டு பெண்களையும் பெரிய கண்ணாடி ஷோ ரூம்க்கு அழைத்து சென்ற யாதவ், கவியின் கண்களை அங்கிருந்த மருத்துவர் சோதனை செய்யக் கூறி, அவளுக்கு ஏற்ற கண்ணாடியை வாங்கி கொடுத்தே ஹாஸ்டல் வந்து விட்டு சென்றான்.

"மச்.. என்ன தான் டி இப்ப உனக்கு வேணும்" என்றாள் சலிப்பாக.

"எனக்கு ஒன்னும் வேணாம் டி. உனக்கு தான் வேணும்" தலையும் புரியாமல் வாலும் புரியாமல் சொன்ன ஸ்வாதியை கண்டு குழம்பிய கவி,

"நான் என்ன வேணும்னு சொன்னேன் தெளிவா சொல்லு ஸ்வாதி" என்றாள்.

"வேலை தான் கவி, இங்க பாரு கேர் டேக்கர் வேலைக்கு நல்ல குணமான நர்ஸ் வேணும்னு நியூஸ் பேப்பர்ல விளம்பரம் வந்திருக்கு" என்றதும் உறக்கம் எல்லாம் தூர ஓடி கண்கள் விரித்தவளாக,

"என்ன டி சொல்ற உண்மையாவா" என்றவாறு அவள் கையில் இருந்த பேப்பரை வாங்கி பார்த்த கவி,

"ஸ்வாதி சூப்பர்ல இந்த இடம் கூட இங்க தான் பக்கத்துல இருக்கு.. ஒரு 20, 25 நிமிஷ பயணம் தான் இருக்கும்" என்று உற்சாகம் பொங்க சொன்ன கவியின் முகம் அப்படியே வாடி விட்டது.

"என்ன கவி உனக்கு இந்த வேலை பிடிக்கலயா என்ன, ஏன் உன் முகம் மாறிடுச்சி" ஸ்வாதி புரியாமல் பார்த்தான்.

"இல்ல ஸ்வாதி எனக்கு புடிச்சி இருக்கு, ஆனா இந்த வேலை எனக்கு வேணாம்"

"ஏன் கவி அப்டி சொல்ற"

"தெரியல ஸ்வாதி, என்னவோ மனசு எல்லாம் ஒரே படபடப்பா இருக்கு, சரியா காரணம் சொல்ல தெரியல ஆனா என்னமோ மாறி இருக்கு டி" தன்னுள் புதிதாக முலைத்திருக்கும் உள்ளுணர்வுக்கு காரணம் அறியாமல் திண்டாடிப் போனாள்.

"புதுசா ஒருத்தங்க வீட்டுக்கு போய் வேலை பாக்கணுமேன்னு பயத்துல கூட உனக்கு அப்டி தோணும்..

இங்க பாரு கவி, நீயும் நிறைய ஹாஸ்பிடல் ஏறி இறங்கிட்ட, ஆனா எல்லாரும் உன்ன ஏலனம் பேசி தான் அனுப்பி விட்டாங்க.. அப்டி இருக்க நீ ஆசைபட்டு படிச்ச படிப்புக்கு, உனக்கு பிடிச்ச வேலை கிடைகலையேன்னு எனக்கு எவ்ளோ வருத்தமா இருக்கும் தெரியுமா.

உனக்கு பிடுச்ச வேலைய ஒரு மாசமாவது மனசார நீ செஞ்சிட்டா எனக்கு அதுவே போதும் கவி.. அதுக்கப்புறம் உன்ன கடைசி வரை நான் பாத்துக்குறேன் டி..

அதுக்கு முன்னாடி என் கவி ஆசை பட்டது நிறைவேறனும், அப்ப தான் எனக்கும் நிம்மதியா இருக்கும்.. எனக்காக இந்த இன்டெர்வியூ போய் அட்டென் பண்ணுவியா கவி" அவள் நாடி பிடித்து கொஞ்ச, தோழி தன் மேல் வைத்திருக்கும் ஆர்பரிக்கும் அன்பில் மெய்யுருகி போனாள் கவி.

"உனக்காக போறேன் ஸ்வாதி" முகத்தை தூக்கி வைத்து சொல்ல, அதில் மெல்ல சிரித்த ஸ்வாதி,

"சிரிச்சிட்டே சொன்னா என்னவாம்.."

"இந்த சிரிப்பு போதுமா" மொத்த பல்லையும் காட்டி கேட்க,

"அம்மா தாயே தெரியாம உன்ன சிரிக்க சொல்லிட்டேன், இனிமே கேக்க மாட்டேன் ஆள விடு, எனக்கு ஆபிஸ்க்கு நேரமாச்சி" என்றபடி அடித்து பிடித்து ஓடியவளை கண்டு மனம் விட்டு சிரித்து வைத்தாள் கவி.

இனி இந்த சிரிப்பு நிலைக்குமோ என்னவோ?
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 14
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top